Posts

Showing posts from August, 2023

23

23  இந்த மாதம் 23ம் தேதி  இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. முதலாவது விஷயம் பற்றி ஊரே பேசிக் கொண்டிருக்கிறது. 24 ஆம் தேதி ஆட்டோவில் வரும்போது என்னால் ராட்டினம் கூட ஏற முடியாது நிலவை தொட்டு விட்டார்களே என்று இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வந்ததை என் காதுகளால் கேட்டேன். கட்டற்ற நுகர்வு இந்தப் பிரபஞ்சத்தையே பெரிய சந்தை  என நினைக்கும் மனநிலை, இவை எனக்கு உடன்பாடில்லை. வியாபாரத்தைத் தவிரவும் இந்த வாழ்க்கையில் சில இன்பங்கள் இருக்கின்றன என்று நம்புகிறேன்.  இருந்தாலும் மானுட வல்லமை மீது இது போன்ற தருணங்களில் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஒரு காலத்திய கொள்ளை நோய்கள் இன்று சில மாத்திரைகளில்  குணமடைகின்றன. எனவே மானுடன் தனது எல்லைகளை முயன்று கடக்கும் போது சந்தோஷப்படாமல் இருக்க முடிவதில்லை. மனிதனுக்கு நிலவிலும் பிற கோள்களிலும் என்னென்ன பரிசுகள் மற்றும் சவால்கள் காத்திருக்கின்றனவோ இனிமேல் தான்  தெரியவரும்.  இனி இரண்டாவது விஷயம்.  ஆகஸ்ட் 23 அன்று நமது திராவிடப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடத்தப்படும் புதன் வட்ட நிகழ்வில் நமது பல்கலைக்கழக ஆய்வு மாணவர் திரு சண்முக விமல் குமார் (எழுத்தாளர் றாம்சந்தோஷ்)  திணைக

அடியேனும் வந்து விட்டேன்

நண்பர்கள் நேற்று கடல் தாவு படலம் நிறைவு செய்தார்கள்  பத்து மணிக்கு பிறகும் மூன்று பாடல்கள் எஞ்சியிருந்தன.  இருந்தாலும் முயன்று படலம் நிறைவு செய்யப்பட்டது.  ஒவ்வொரு வாரமும் வாசிக்க வேண்டிய பாடல்களை அந்தந்த வாரத்துக்குள்ளேயே முடித்துவிடும்  வழக்கம் இந்த முறை தவறிவிட்டது. நேற்று அனுமன் இலங்கையை அடைந்த காட்சியை வாசிக்கும் போது நான் அனுமன் மைநாகம் சந்திப்புப் பகுதியிலிருந்தேன். அடுத்து ஊர் காட்சிப்படலம் இது இப்படியே போனால் இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கும்.  இன்று காலை எழுந்ததும் விடுபட்ட பாடல்களை முதலில் வாசித்து விட்டேன்.  ராபர்ட் பாய்ஸ் என்ற பிரிட்டிஷ் உளவியலாளர் எழுத்துப் பழக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளால் அறியப்பட்டவர்.  அறிவும் ஆற்றலும் மிக்க பேராசிரியர்கள் சிலர் ஏன் போதுமான அளவு எழுதுவதில்லை என்ற கேள்வியை அவர் எதிர்கொண்டார் ‌  அவருடைய முடிவு சுவாரஸ்யமானது.  எப்போதாவது எழுதுவேன், நிறையபக்கங்கள்  எழுதுவேன், அதிக நேரம் எழுதுவேன் என்று சொல்பவர்கள் ஒரு தரப்பு.  தினம் தோறும் எழுதுவேன், குறைந்த நேரம் எழுதுவேன், குறைந்த அளவே எழுதுவேன், என்று சொல்பவர்கள் இன்னொரு தரப்பு.  இந்த இரண்டு தரப்பி

என்ன ஆகியிருப்பேன்?

என் அம்மாவுக்கு வயது 72. ஒரு பெரிய ஸ்லேட் பலகையில் அ என்ற எழுத்தை எழுதி அந்த பெரிய எழுத்தின் மேல் என்னை நூற்றுக்கணக்கான முறை எழுத வைத்து தமிழ் எழுத்துக்களை கற்றுக் கொடுத்தார். ஸ்மால் எழுத்துகள் எனக்கு சரியாக எழுத வரவில்லை என்று ஆறாம் வகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டபோது எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக் கொடுத்தார். கல்லூரி நாட்களில் ஒவ்வொரு நாளும் எனக்காக சில மணி நேரங்கள் பாடங்களை ஒலிப்பதிவு செய்து கொடுத்தார். ஆயிரக்கணக்கான பக்கங்கள் நீளக்கூடிய ஜெயகாந்தன் நாவல்களை எனக்காக படித்து பொருத்தமான அடிக்குறிப்புகளை நான் அமைக்க உதவினார். ஒவ்வொரு நாளும் நான் படிக்க வேண்டும் எழுத வேண்டும்,என்பதில் அப்படி ஒரு ஆர்வம் அவருக்கு.  இப்படி ஒரு அம்மாவின் மகனாகப்  பிறந்து நான் படிப்பதிலும் எழுதுவதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை படிக்காமலும் எழுதாமலும் இருந்தால் தான் ஆச்சரியம் !  இவரின் மகனாக பிறக்கவில்லை என்றால் என்ன ஆகியிருப்பேன்? 

ஆசிரியர் சேலம் சங்கருக்கு அஞ்சலி

நான் படித்த தூய லூயி காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளியில் வரலாற்றுப் பாடம் கற்பித்த ஆசிரியர் சேலம் சங்கர் அவர்கள். எங்கள் ஆசிரியர் பள்ளியில் அறியப்பட்டது வரலாற்று ஆசிரியர் என்பதை விட ஓர் இலக்கிய ஈடுபாட்டாளராக. தனது கம்பீரமான குரல், அடுக்கு வசன நடை இவற்றால் எங்கள் மனதில் இடம் பிடித்தார். பள்ளி சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் நாங்கள் படித்த காலத்தில் அவர் தான் தொகுப்பாளர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சரளமாகப் பேசுவார். சேலம் சங்கர் எம் ஏ என்று மேடையில் அவர் சொல்வதே அழகு.  நிலவோ அந்த வானத்திலே நான் நின்று கொண்டிருந்தேன் மோனத்திலே வந்தால் வஞ்சி தேரினிலே நான் தந்தேன் நெஞ்சை அவள் பாரினிலே என்று தொடங்கும் கவிதை ஒன்று இப்படி முடியும் மறைந்தவள் மறைந்தே போகட்டும் அவள் மங்கல வாழ்வு வாழட்டும்  நிலவில் அவள் முகம் தெரியட்டும் அந்த நினைவில் என் கதை முடியட்டும் நாங்கள் இந்த கவிதையில் பித்தாகி அலைந்திருக்கிறோம். மோகன் இளங்கலை நேர்முகத் தேர்வில் இந்தக் கவிதையைச்சொல்லித்தான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இடம் பெற்றுங்கொண்டான்.  ஒட்டு மாங்கனி, எச்சில் இரவுகள் என்று சில சினிமாக்களில் தான் வ

பத்தும் ஐந்தும் ஒரு பகலன்றோ!

நண்பர் பசவராஜ ஐயப்ப கோடகுண்டி குல்பர்கா மத்தியப்பல்கலைக்கழகத்தில்  கன்னடத்துறையில் பேராசிரியராகப்  பணியாற்றுகிறார். 2005ம் ஆண்டு நான்  திராவிடப் பல்கலைக்கழகத்தில்  பணிக்குச்சேர்ந்தபோது நண்பர் கன்னடத்துறையில் பணிக்குச் சேர்ந்திருந்தார்.  பிறகு கர்நாடக மாநிலத்தில்லுள்ள மத்தியப்  பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பசவராஜ் அடிப்படையில் ஒரு மொழியியல் ஆய்வாளர். ஆனால் அவரை அப்படி ஒரு துறையுடன் வரையறுத்து நிறுத்துவதும் கடினம். அண்மையில் அக்கமகாதேவி குறித்து புத்தகம் எழுதியிருக்கிறார். ராமச்சந்திர பேந்தரே பற்றியும் இன்னொரு புத்தகம்.   நீங்களே சொல்லுங்கள்? இப்படிப்பட்டவர்களை ஒரு துறையுடன் எப்படிப் பொருத்துவது?  திராவிடப் பல்கலைக்கழக கன்னடத்துறையின் பாடத்திட்ட வரையறைக் குழு கூட்டம் ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்க பசவராஜ் வந்திருந்தார்.  கூட்டம் முடித்து இரவு நமது வீட்டில் சாப்பிட்டார். கன்னடத்  தமிழ் அகராதி ஒன்றை உருவாக்க அடிப்படைப் பணிகளை நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டுச் செய்தது  பற்றி எல்லாம் பேச்சு சென்று கொண்டிருந்தது.  அவர் வீட்டுக்கு வந்

ஒரு அவசரப் பிரார்த்தனை

எனக்குக் கண்பார்வை கிடையாது. அதுவும் பிறந்தது முதல். இப்போது ஒரு கூடுதல் நெருக்கடி. தமிழ் சீரியலின் அடுத்த கட்ட நகர்வை தாங்கிக் கொள்ள முடியவில்லை.  இதுவரை நமது சீரியல் களில் கணவன் மனைவி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது முன்னாள் கணவனும் முன்னாள் மனைவியும்   சண்டை போட்டுக் கொள்கிறார்கள். மகள் படிக்கும் கல்லூரிக்கு அம்மா செல்கிறாள் மாணவியாக.  அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அம்மாவின் முன்னாள் கணவர் அவள் வீட்டிற்கு வந்து புகார் சொல்கிறார்.  விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலைத்தான்  சொல்கிறேன். ஆகஸ்ட் 12 சனிக்கிழமை காட்சி.  பார்க்காவிட்டால் வீட்டிலிருக்கும் சிலரின் இதயம் வெடித்து சிதறிவிடும்.  இப்போது ஒரு பிரார்த்தனை.  பாக்கியலட்சுமி சீரியல் டிவியில் வரும்போது மட்டும் எனக்குக் காது கேட்க கூடாது  

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 7 மணிக்கு நான் ஈரோட்டில் இறங்கினேன் நண்பர் பாரி ஈரோட்டில் வந்து என்னை அழையுங்கள் அண்ணா என்று வாட்ஸ் அப் செய்தி அனுப்பி இருந்தார் அதற்குத் தேவை இருக்கவில்லை ரெட் டாக்ஸி சேவை சிறப்பாக அமைந்தது கவுண்டச்சி பாளையத்தில் உள்ள கல்யாண மண்டபத்தை நான் அடையும்போது வாசலில் நூற்பு  சிவகுருநாதன் அவர்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்னை பார்த்தவுடன் நண்பர் சிவகுருநாதன் வந்து அழைத்துச் சென்றார்.  மாடிக்கு செல்லும்போது பேராசிரியர் இளங்கோவன் அவர்களின் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. குடந்தை சுந்தரேசனார் குரலை தாம் ஆவணப்படுத்திய அனுபவத்தை பேராசிரியர் பகிர்ந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடித்து இரவு உணவு சாப்பிட்டோம்.  நண்பர்களுடன் நான் நின்று யோகம் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த எழுத்தாளர் ஜெயமோகன் அன்புடன் என் கையைப் பிடித்துக் கொண்டார். குருகு இணைய இதழின் ஆசிரியர் நண்பர் அநங்கன் அவர்களுடன் தீ நம் ஸ்ரீ கண்ட அய்யா அவர்களின் இந்திய கவிதையியல் நூல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.  அவரும் சிவகுருநாதனின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். புத

இன்று தொடங்குகிறோம்!

இன்று ஆகஸ்ட் 16. இம்பர் வாரி வாசிப்புக் குழு சார்பில் கம்பராமாயண கூட்டு வாசிப்பின் பகுதியாக சுந்தரகாண்டம் தொடங்குகிறோம். இன்பர்வாரி புலனக்குழுவில் நண்பர் ஸ்ரீநிவாஸ் சுந்தரகாண்டத்தை பகிர்ந்து விட்டார். இன்று முதல் சில மாதங்கள் நாங்கள் இலங்கையில் வாழவிருக்கிறோம்.  சில நாட்களுக்கு முன்பு ஜெ தனது இணையதளத்தில் இப்படி எழுதி இருந்தார்  ஒரு லட்சியவாத செயல்திட்டம் என்பது மிக நீண்டது. அதேசமயம் அதன் விளைவுகள் ஒவ்வொரு நாளும் காணக்கூடியதாக இருக்கவும் வேண்டும்.  இந்த வரிகளை கம்பராமாயண வாசிப்புடன் பொருத்திப் புரிந்து கொள்கிறேன்.  பத்தாயிரம் பாடல்களை வாசிப்பது என்பது ஒரு நீண்ட செயல்திட்டம். ஆனால் 45 பாடல்களை வாசிப்பது ஒவ்வொரு வாரமும் உணர்ந்து நிறைவடைய காரணமாகிறது.                      வாழ்க்கை.                                                       இனியது,                                                       இனியது,                      இன்னும்                                                        இனியது! 

இந்திய எழிற்கலை நூல் அறிமுகம்

சென்னைப் பல்கலைக்கழக பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக  தத்துவத்துறை சார்பில் இந்திய எழிற்கலை என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தத்துவத் துறைக்கு டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி  மையம் என்று  பெயர்.  பேராசிரியர் பெ திருஞானசம்பந்தன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஐந்து  உரைகளின்  எழுத்து  வடிவம் இந்த நூல். இந்தியக் கவிதையியல் குறித்து தமிழில் நூல்கள் இல்லை  என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோது இந்த நூல் நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டது.   நூலாசிரியருக்கு தருமபுர ஆதீனம் மும்மொழிக் கொண்டல் என்ற விருதை வழங்கியுள்ளது. நூலில் இடம் பெற்றிருக்கும் ஆங்கிலம், தமிழ் வடமொழி மேற்கோள்களிலிருந்து இத்தகைய ஒரு விருதுக்கு இவர் தகுதியுடையவர் என்றுதான்  தோன்றுகிறது.  நூலின் தொடக்கப்பகுதி கலையும்எழிலும் என்பதாகும்.   ஐந்து உரைகளுள் முதலாவது என்பதால் கலை பற்றிய பொதுவான அறிமுகமாக இந்தக் கட்டுரையைக் கொள்ளலாம்.  நடை,,குணம் முதலிய கவிதைக் கொள்கைகள் பற்றி இரண்டாவது இயல் விரிவாக விளக்குகிறது. சுவைக் கொள்கை பற்றியும்  ரசம் எனப்படும் சுவை தோன்ற காரணங்கள், சுவையின் விளைவுகள் பிற்காலத்த

சாலையொர சந்திப்புகள்

கடிகார முட்களுக்கு    பயப்படாமல் காத்திருக்கும்.  பக்கத்துத் தெருவில் எனது தடியொசை   கேட்கும் போதே எனக்குக் கேட்கும் உறுமல் சத்தம்.  குரலைக் கேட்டே  எதையும் புரிந்து கொள்ள முடியும்.  நான் அடிக்கவும் அது கடிக்கவும் போவதில்லை என்றாலும் சடங்குக்குக் குறைப்பவைகளை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது கவிதை எழுத வேண்டும் என்று மனசுக்குள் உறுத்தும்!   நான் படித்த சென்னை கிருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு கவிதை சந்திப்பு நிகழும். திறந்த வெளியில் மரத்தடியில் புல்வெளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் வட்டமாக உட்கார்ந்து கவிதைகளை வாசித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது  வழக்கம். இலக்கியம் சார்ந்த எனது நுண்ணுணர்வு வகுப்பறைக்கு இணையாக  ஏன் மேலாகவும் கூட அந்த சந்திப்புகளில் வளர்ந்திருக்கிறது  என்று சொல்வேன். பிற்காலத்தில் தொலைக்காட்சி திரைப்படம் சிற்றிதழ்கள் முதலிய பல்வேறு ஊடகங்களில் முக்கியமான பங்களிப்பைச் செய்த சிலர் அப்போது இளைஞர்களாக எங்களுடன் வெள்ளிக்கிழமை கவிதை சந்திப்புகளில் பங்கேற்றார்கள். நிகழ்வை முன்னெடுத்த ஆசிரியர் பாரதி புத்திரன் அவர்களை வணங்குகிறேன். அத்தகைய சந்திப்பு ஒன்றில்

நான் பேசுகிறேன்

இம்பர்வாரி என்ற பெயரில் கிளப் ஹவுஸ் செயலியில் ஒரு வாசிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. நண்பர்களாகிய நாங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி ஆகிய நாட்களில் இரவு   8=30 மணி முதல் 10 மணி வரை கம்பராமாயணம் வாசிக்கிறோம். பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம் கடந்து இப்போது கிட்கிந்தா காண்டம் நிறைவு செய்து விட்டோம்.  சென்னைக் கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியர் கு அரசேந்திரன் அவர்களின் திருவடி தொழுது நான் கம்பராமாயணப் பாடல்களைக்  கற்றிருக்கிறேன்.  பத்தாயிரம் பாடல்களை இந்த வாழ்வில் வாசித்து முடிக்க முடியுமா என்ற மலைப்பு எனக்குள் இருந்தது.  ஆனால் அந்தக் கனவுக்கு நண்பர்கள் செயல்வடிவம் கொடுத்தார்கள். நண்பரxகள் ஸ்ரீனிவாஸ் மற்றும் கமலநாதன் எழுத்தாளர் பார்கவி உள்ளிட்ட குறையாத ஆர்வம் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் இம்பர் வாரியில் உண்டு.  ஆயிரம் பாடல்களை முடித்த பிறகு முற்றோதல் செய்வதும் அவ்வப்போது கலந்துரையாடல்களை அமைத்து பாடல்களின் நுட்பங்களை புரிந்து கொள்வதும் எங்கள் வழக்கம்.   எங்கெங்கோ வெளிநாடுகளிலிருந்து நண்பர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கம்பனைக்  கற்பதில் காட்டும் அர்ப்பணிப்பு எ

சிறுகதை அறிமுகம்

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமது  இணையதளத்தில் ஒரு புதிய சிறுகதை வெளியிட்டு இருக்கிறார். சிறிய கண்டுபிடிப்பாளன் என்பது சிறுகதையின் தலைப்பு. அசோக் குமார் என்ற விஞ்ஞானியின் கண்டுபிடிப்புகள சாதாரணமான வாழ்க்கை நடத்துபவர்களுக்கு உதவியாக இருக்கின்றன. ஆனால் அத்தகையவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தை ஒரு கதையாக எழுதி இருக்கிறார். படித்துப் பார்க்க நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். 

வாழ்த்துகள்

இன்று  ஆகஸ்ட் 2ம்தேதி பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற வாராந்தர ஆய்வறங்கில் நண்பர்பொருநை  க. மாரியப்பன் தாம் மொழிபெயத்த கருமிளகுக்கொடி என்ற நாவல் குறித்து உறையாற்றினார்.  இந்த நாவல் வி சந்திரசேகர ராவ் அவர்களால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது.  மொழிபெயர்ப்பின்போது எந்தெந்த அம்சங்கள் எவ்வெவ்வாறு பிரிதொரு மொழியில் பகிரப்படுகின்றன என்பவை குறித்த  நண்பர் க. . மாரியப்பன்   அவர்களின் உரை சிறப்பாக இருந்தது. நண்பருக்கு வாழ்த்துகள்! 

ஈரோட்டில் சந்திக்கலாம்

எழுத்தாளர் ஜெயமோகன் முன்னெடுத்து வரும் தமிழ் விக்கி அமைப்பின் வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் ஐந்து மற்றும் ஆறாம் தேதி  ஈரோட்டுக்கு அருகில் உள்ள  கவுண்டச்சி பாளையத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. அதில்  இந்த வருடமும் பங்கேற்கிறேன். சென்ற ஆண்டு நண்பர் தாமரைக்கண்ணன் அறிமுகமானார். இந்த ஆண்டு எனக்கு இன்னும் பல புதிய நண்பர்கள் அமைவார்கள். மகிழ்வுடன் இணைந்து மறுபடியும் எப்போது சந்திக்க இருக்கிறோம் என்ற எதிர்பார்ப்பில் பிரிவதே கற்றவர்களின் இயல்பு என்கிறது வள்ளுவம். வாருங்கள் நண்பர்களே நாம் விழாவில் சந்திப்போம்.