Posts

Showing posts with the label சுந்தர காண்டம்

இன்று தொடங்குகிறோம்!

இன்று ஆகஸ்ட் 16. இம்பர் வாரி வாசிப்புக் குழு சார்பில் கம்பராமாயண கூட்டு வாசிப்பின் பகுதியாக சுந்தரகாண்டம் தொடங்குகிறோம். இன்பர்வாரி புலனக்குழுவில் நண்பர் ஸ்ரீநிவாஸ் சுந்தரகாண்டத்தை பகிர்ந்து விட்டார். இன்று முதல் சில மாதங்கள் நாங்கள் இலங்கையில் வாழவிருக்கிறோம்.  சில நாட்களுக்கு முன்பு ஜெ தனது இணையதளத்தில் இப்படி எழுதி இருந்தார்  ஒரு லட்சியவாத செயல்திட்டம் என்பது மிக நீண்டது. அதேசமயம் அதன் விளைவுகள் ஒவ்வொரு நாளும் காணக்கூடியதாக இருக்கவும் வேண்டும்.  இந்த வரிகளை கம்பராமாயண வாசிப்புடன் பொருத்திப் புரிந்து கொள்கிறேன்.  பத்தாயிரம் பாடல்களை வாசிப்பது என்பது ஒரு நீண்ட செயல்திட்டம். ஆனால் 45 பாடல்களை வாசிப்பது ஒவ்வொரு வாரமும் உணர்ந்து நிறைவடைய காரணமாகிறது.                      வாழ்க்கை.                                                       இனியது,          ...