Posts

Showing posts with the label புத்தக அறிமுகம்

சுய முன்னேற்ற நூல்களும் நானும்

சுய முன்னேற்ற நூல்களுக்கும்  எனக்கும் நடுவில் அமைந்த உறவு விந்தையானது. 20 களில் என்னுடைய  நூலக அடுக்கில் நிறைந்திருந்த சுய முன்னேற்ற நூல்களை  நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேற 30 நிமிடங்கள்  என்பது முதலாக உங்களுக்குள் இருக்கும் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?  முதலிய  புத்தகங்கள். 30 களில் எனது மனப்போக்கு தலைகீழாக மாறியது. சுய முன்னேற்ற நூல்களைப் படித்து மேம்படுத்திக் கொள்ளும் அளவுக்கு எனக்குரிய சிக்கல்கள் எளிமையானவயா என்ற கேள்வி.  அதன் பிறகு சுய முன்னேற்ற நூல்களைப் பற்றியும் அவற்றை வாசிப்பவர்கள் குறித்தும் மெல்லிய ஏளனம். ஆனால் 40 களில் மறுபடியும் சக்கரம் சுழன்றுவிட்டது.  Book share. Org என்ற இணைய முகவரியில் செயல்படும் நூலகம் உலகெங்கும் வாழும் பார்வையற்ற வாசகவர்களின் சொர்க்கம்.  பணி வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நான் மிகுந்த மனச்சோர்வுக்கு உட்பட்டிருந்த காலம். அப்போது ஒரு நாள் அந்த நூலகத்தில் Michael D Yakub என்ற மருத்துவர் எழுதிய depression is contagious மனச்சோர்வு  பரவக்கூடியது என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. ...

சந்தத்தின் சிறு நடனம்

கவிஞர் வி. சங்கர் அவர்களின் சூது பவளம் கண்டேன் அல்லேன் என்ற கவிதை தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரே ஒரு முறை மட்டும் தான் ஒவ்வொரு கவிதையையும் படித்திருக்கிறேன். அர்த்தம் பற்றி எல்லாம் அப்புறம் பேசலாம். சந்த அனுபவத்திற்காகவே ஒருமுறை படித்துப் பார்க்கலாம். நவீன கவிதைகளில் காணப்படும் ஓசை வறட்சியை இந்தத் தொகுப்பு போக்கிவிட்டது என்று கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்கள் முன்னுரையில் கூறியிருக்கிறார். நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன் . 

நட்சத்திரங்களில் நடப்பவர்கள்

பகல் உழைப்புக்கும் இரவு ஓய்வுக்கும் உரியவை என்று சொல்லப்படுவதுண்டு  ஆனால் தூக்கம் வராத பொழுதுகளில் ஜன்னல்களின் வழியே எட்டிப் பார்ப்பவர்களுக்கு இன்னொரு உலகம் திறந்து கொள்வதுண்டு. பைத்தியக்காரர்கள், குடிகாரர்கள், நோயாளிகள் மட்டுமல்ல மின்னும் நட்சத்திரங்கள், ரகசிய வாசனைகள் என்று இரவு தனக்குரிய மர்மங்களுடன் நமக்காகக் காத்திருக்கிறது.  ஜெயமோகனின் இரவு நாவலின் சில அத்தியாயங்களை அவருடைய இணையதளத்தில் வாசித்ததுண்டு. ஆனால் அண்மையில் வந்த ஒரு வாசகர் கடிதம் அந்த நாவலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது.  சரவணன் என்ற ஆடிட்டர் கேரளத்தில் எர்ணாகுளம் அருகே ஓய்வுக்கு சென்றபோது இரவில் மட்டுமே வாழும் மனிதர்களை  தற்செயலாகச் சந்திக்கிறான். நீலிமாவை சரவணன் சந்திப்பதும் , இரவில் விழிப்பு பகலில் உறக்கம் என்று வாழக்கூடிய , அவளைத் திருமணம் செய்து கொள்வதும் கமலா என்ற பெண்ணின் கொலையும் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும் கதையின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியது போன்று காட்சியளிக்கும் சில வரிகள். ஆனால் அது கதையைப் புரிந்து க...

பாரதி என்னும் நிகழ்வு

Image
பாரதி பற்றி விடுதலைப் போராட்ட வீரர் திருமிகு வ. ரா அவர்கள் எழுதிய நூல் மகாகவி பாரதியார். பாரதியாரின்  வாழ்வை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இந்த புத்தகத்தில் வ.ரா முன்வைத்துள்ளார். பக்தன் தெய்வத்தை ஆராதிப்பது போல் பாரதியை அவர்  கொண்டாடுகிறார். 28 அத்தியாயங்களில் ஆற்றோழுக்கான நடையில் பாரதியின் ஒட்டுமொத்த வாழ்க்கை குறித்த சித்திரத்தை இந்த புத்தகம்  வெளிப்படுத்துகிறது.  தாயில்லாப் பிள்ளையாக,  தந்தையின் பரிவைப் பெற்ற பையனாக,  மொழியை கற்றுக் கொள்வதில் அளவு கடந்த திறமை கொண்ட  இளைஞனாக பாரதியின் தொடக்க கால வாழ்க்கை விளக்கப்பட்டிருக்கிறது.  ஜி. சுப்பிரமணிய ஐயர், ரங்கசாமி அய்யங்கார், வெல்லச்சு கிருஷ்ணசாமி செட்டியார் முதலிய அற்புதமான நண்பர்களால் பாரதி சூழப்பட்டிருக்கிறார்.  இந்த புத்தகம் பாரதியின் புதுவை வாழ்க்கை பற்றி மிக விரிவாக விளக்குகிறது. பாரதியின் வாழ்வில் படைப்பூக்கம் மிக்க காலகட்டம் என்று புதுவை  காலகட்டத்தையே சொல்ல முடியும்.  பாரதிக்காக வ.ரா மொழியில் அமைத்த பேராலயம் இந்நூல். . இந்த   ஆலய மூலஸ்தானத்தில் பாரதி இருப்பத...

பல்கலைக்கழகத்தில் பேசினேன்

பல்கலைக்கழக புதன் வட்ட நிகழ்வில் நவம்பர் 8 அன்று   Deep work Rules for focus in the destructed world என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்திப் பேசினேன்.  ஒன்பதாம் தேதி பேசுவதாகத் தான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால்  ஒரு நாள் முன்பே  பேசி விட்டேன். இந்த புத்தக அறிமுகம் மாணவர்களுக்கு தீபாவளி பரிசு என்று சொல்லியிருந்தேன். பரிசு தருவது இன்பம். முன்கூட்டியே கொடுக்கும் வாய்ப்பமைந்தால் பேரின்பம்!  புத்தக அறிமுகத்தை விரைவில் எழுத வேண்டும்.