நமக்குக் கேட்கும் சாதனாவின் குரல்
இந்தக் குறிப்பு ஸ்ரீ சத்யானந்தர் மரபார்ந்த யோக மையத்தின் சார்பில் யோகப் பயிற்சி செய்யும் மாணவர்களை மனத்தில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. மற்ற நண்பர்கள் தவிர்த்து விடலாம். ஒவ்வொரு நாளும் ஒரு யோகமாணவர் ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம் என்று யோகப் பயிற்சி செய்து வருகிறார். ஆனால் சில நாட்கள் பயிற்சிகளை முறையாக செய்ய முடியவில்லை. அப்போது என்ன நிகழும் என்பதற்கு என்னளவில் சில அவதானிப்புகளை முன்வைக்கமுடியும். 1. தொடக்க காலத்தில் பயிற்சி செய்யும் போதும் மாற்றங்களை நம்மால் எளிதில் கண்கூடாக பார்க்க முடியாது.. இதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு. தொடக்கத்தில் பயிற்சி செய்த நாட்களிலும் மனச்சோர்வை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அது மெல்ல மெல்ல மாறும் என்பது அப்போது எனக்குத் தெரியாது, ஆனால் அது மாறியது . 2. சிறிது காலம் கழித்து உடல் மற்றும் மன நிலைகளில் பயிற்சி செய்யும் நாட்களுக்கும் பயிற்சி செய்யாத நாட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தெளிவாகத் தெரியத் தொடங்கின. . பயிற்சி செய்த நாளுக்கும் செய்யாத நாளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒரு ...