Posts

இவர்கள் வாழ்ந்தார்கள்

எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதையில் இப்படி ஓர் இடம் வருகிறது. அவருடைய வீட்டிற்கு இரண்டு இளம் அதிகாரிகள் வருகிறார்கள். ஒருவர் வங்கியின் மேலாளர், மற்றொருவர் அக்கவுண்டன்ட். . அக்கவுண்டன்ட் முகத்தை பார்த்தவுடன் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று எஸ் எல் பைரப்பாவிற்குத் தோன்றுகிறது. ஆனால் எங்கே என்றுதான்  நினைவிற்கு வரவில்லை. தான் ஒரு நடுத்தரவர்க சம்பளதாரர் என்று எவ்வளவோ கூறிய நிலையிலும் அந்த அக்கவுண்டன்ட் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று எஸ் எல் பைரப்பா அவர்களை மிகவும் வற்புறுத்த வேறு வழியே இல்லாமல் இவரும் சம்மதிக்கிறார். ஒரு நாள் காலை தாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ் எல் பைரப்பா அவர்கள் சென்றபோது அககவுண்டன்ட் வர காலதாமதம் ஆகிவிட்டது. 13 நிமிடங்கள் கால தாமதமாக வங்கிக்கு வந்த அந்த இளம் அதிகாரி அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு தம்முடைய பணியை ஆரம்பிக்கிறார். அப்போதுதான் அந்த இளம் அதிகாரி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மகன் என்று எழுத்தாளர் எஸ் எல் பைரப்பா அவர்களுக்குத் தெரிய வருகிறது.  இவர்கள் வாழ்ந்தார்கள்,  இவர்...

அந்தப் புறாக்கள்

என்னுடைய கல்லூரிக் காலகட்டம். என் ஆசிரியர் சா. பாலுசாமி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எழுத்தாளர் ஜி நாகராஜன் குறித்து ஓர் உரையாற்றினார். தற்செயலாக ஒரு நாள் ஆசிரியர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது  கட்டில் மீது காலச்சுவடு இதழ்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.                         காலச்சுவடு இதழை நான் முதலில் பார்த்த ஞாபகம் அதுதான். என்னுடைய முதுகலைக் காலகட்டத்தில் காலச்சுவடு இரு மாத இதழாக மறுபடியும் வெளிவரத் தொடங்கியிருந்தது.            அவ்வப்போது காலச்சுவடு இதழை வாசிக்க முயன்றதுண்டு. அண்மையில் ஓராண்டு சந்தா கட்டி இணைய வழியில் இதழை வாசித்து வந்தேன். ஆனால்  தொடர்ச்சி விடுபட்டுவிட்டது. இப்போது முயன்று ஐந்தாண்டு சந்தா கட்டிவிட்டேன். ஓர் இலக்கிய இதழ் தொடர்ந்து வாசிக்க கிடைப்பதென்பது மகிழ்ச்சியான விஷயம் இல்லையா,  என் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவது போல  எழுத்தாளர் எம் கோபாலகிருஷ்ணன் எழுதிய முடிய சாளரம் என்ற சிறுகதை மே மாத இதழில் வெளிவந்துள்ளது.    ...

கையசைத்துச் செல்கிறது காலம்

ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்ற காலத்தில் வந்த தேர்தல் முடிவுகளையொட்டி ஜெயலலிதா முதலமைச்சரானார். தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டுவிட்டு வந்து நான் என் அப்பாவிடம் பரபரப்பாகக் கூறினேன். அப்பா வரட்டும்,வந்து ஆட்சி செய்து காட்டட்டும் ! என்று எரிந்து விழுந்தார்.           அடுத்த தேர்தலுக்குப் பிறகு விஜய் ஆட்சிதான் ! என்று என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ சொன்னபோது எனக்கும் எரிச்சலாக இருந்தது என் அப்பாவைபோல!  அப்பாவின் இளம் வயதிலேயே அவருடைய அப்பா ‌ காலமாகிவிட்டார். அறிஞர் அண்ணா இறந்த நாளில் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஒரு லாரியில் தொற்றி ஏறி ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் கேம்ப் என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து அண்ணாவின் உடலைப்  பார்த்துவிட்டுப் போன என்னுடைய அப்பாவைப்  பற்றி அலுவலகத்திலேயே சட்டையை கழற்றி விட்டு சந்தியா வந்தனம் செய்யும் அளவு மரபு வழிப்பட்ட என்னுடைய தாத்தா அறிந்திருந்தால் என்ன செய்திருப்பார், என்னைப் போலவும் என்னுடைய அப்பாவை போலவும் அவரும் எரிச்சலடைந்திருப்பாரா என்ன?     எங்கள் வீட்ட...

சிந்தை கவர வேண்டும் சிந்தை

அருஞ்சொல் இதழ் நின்றபோது மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அது தொடர்பாக இதே வலை பக்கத்தில் ஒரு சிறு குறிப்பையும் எழுதியிருந்தேன். புதிய தலைமுறை குழுமம் சார்பில் சிந்தை என்ற இதழ் தொடங்கப்பட்டிருப்பதை மிகவும் அண்மையில் தான் அறிந்து வாசிக்கத் தொடங்கினேன். அருஞ்சொல் இதழில் இடம்பெற்ற அதே வகை உள்ளடக்கங்கள். மெட்ராஸ் பேப்பர், அருஞ்சொல் ஆகிய இதழ்களில் வெளிநாட்டு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளை விரும்பி வாசிப்பது என் வழக்கம்.  இன்று மே 3. . இன்று மட்டும் அருஞ்சொல் இதழில் இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன.‌ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பெரிய சக்தியாக நடிகர் விஜயுடைய கட்சி இருக்கும் என்ற பொருளில் இதழியலாளர் திரு. சமஸ் கட்டுரை எழுதியிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக மீதான விமர்சனம் சமஸ் எழுத்துக்களில் தற்போது கூடுதலாகவே இருக்கிறது.. இது வரவேற்கத்தக்க நிகழ்வு. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் ஜனநாயகத்தில் இருக்க முடியாது என்ற நம்பிக்கையே நம்மைத் தொடர்ந்து செலுத்தும் உந்து சக்தியாக ஜனநாயகத்தில் உள்ளது.           அருஞ்சொ...

நமக்குக் கேட்கும் சாதனாவின் குரல்

இந்தக் குறிப்பு ஸ்ரீ சத்யானந்தர் மரபார்ந்த யோக மையத்தின் சார்பில் யோகப் பயிற்சி செய்யும் மாணவர்களை மனத்தில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. மற்ற நண்பர்கள் தவிர்த்து விடலாம்.  ஒவ்வொரு நாளும் ஒரு யோகமாணவர்   ஆசனம், பிராணாயாமம்,  பிரத்யாகாரம் என்று யோகப் பயிற்சி செய்து வருகிறார். ஆனால் சில நாட்கள் பயிற்சிகளை முறையாக செய்ய முடியவில்லை. அப்போது என்ன நிகழும் என்பதற்கு என்னளவில் சில அவதானிப்புகளை முன்வைக்கமுடியும்.  1. தொடக்க காலத்தில் பயிற்சி செய்யும் போதும் மாற்றங்களை நம்மால் எளிதில் கண்கூடாக பார்க்க முடியாது.. இதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு. தொடக்கத்தில்   பயிற்சி செய்த நாட்களிலும் மனச்சோர்வை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அது மெல்ல மெல்ல மாறும் என்பது அப்போது எனக்குத் தெரியாது, ஆனால்  அது  மாறியது .   2. சிறிது காலம் கழித்து உடல் மற்றும் மன நிலைகளில் பயிற்சி செய்யும் நாட்களுக்கும் பயிற்சி செய்யாத நாட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்  தெளிவாகத் தெரியத்  தொடங்கின. . பயிற்சி செய்த நாளுக்கும் செய்யாத நாளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒரு ...

மழையில் நனைகிறார். எஸ். ரா

முன்பு சாருவிற்கு நடந்தது இப்போது எஸ்ராவிற்கு நடக்கிறது. யாருக்கு நடந்தாலும் எனக்கு சந்தோஷம்தான். ஏறக்குறைய ஓராண்டு இருக்கும். சாரு கவிதைகளாக எழுதி அவருடைய இணையதளத்தில் வெளியீட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவருடைய இணையதளத்தில் ஒரு கவிதை பிரசுரமாகியிருக்கும். தற்போது எழுத்தாளர் எஸ்.  ரா வின் சிறுகதைகள் தொடர்ந்து  அவருடைய இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.          எழுத்தாளர் எஸ். ரா அவர்களின் சிறுகதைகளில் கிராமம் என்றும் நகரம் என்றும் சொல்ல முடியாத சிற்றூர்கள், அங்கு எளிய நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒருவித மாயத்தன்மையுடன் புனைவாகிறது. உதாரணமாக கிளி ஜோதிடம் சொல்லும். ஒருவரின் கதையை எடுத்துக் கொள்ளலாம்.  ஒருவருடைய கிளிக்கூண்டு காணாமல் போகிறது. ஒரு புதிரான முறையில் அது திரும்பக் கிடைக்கிறது. ஓராண்டு  முன்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் ஓர் அரசு அதிகாரியின் வாழ்க்கையை எஸ். ரா எழுதிக் காட்டியிருந்தார். அவ்வாறே ஒரு தங்கும் விடுதியில் காவலராக பணிபுரியும் ஒருவரின் கதையையும்  எழுதியிருந்தார். ...

தோள் தொட்டு விரல் சுட்டும் பேருள்ளம்

குருஜி சௌந்தர் அவர்களின் மாணவனாக யோகம் பயில்கிறேன். எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவருடைய தனித்தன்மை என்ன என்பதற்கு இவருக்கு நவீன வாழ்வியலின் சிக்கல்கள் புரிகின்றன என்பதுதான் பதில். நான்  ஏறக்குறைய 1998 ஆம் ஆண்டு ஓர் ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். வாசிப்பது தொடர்பான என்னுடைய சிக்கலை அந்த பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் கூறியபோது அவர் ஏன் நீங்கள் படிக்க வேண்டும்? என்று எதிர்க் கேள்வி கேட்டார்.  சிறிது காலம் கழித்து வேறோர் ஆன்மீகப் பயிற்சி. என்னுடைய நிலையழிவுகளை அந்த ஆன்மீகப் பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் முன்வைக்கும் அளவிற்கு என்னால் அவரை அணுக முடியவில்லை.  குருஜியிடம் எது பற்றியும் பேசலாம், எப்போது வேண்டுமானாலும் பேசலாம்!  நம்முடைய குறைபாடுகளையும் பலவீனங்களையும்  சேர்த்தே அவர் நன்றாகப்  புரிந்து கொள்வார். நமக்கு தேவையானது என்ன என்பதை ஓர் ஆசிரியராக அவர் அறிவதை பலமுறை கவனித்திருக்கிறேன். நான் பதஞ்சலியின் யோக சூத்திரம் படித்துவிட்டேன் என்று ஒருவகை போலிப்பெருமிதத்தில் இருந்து வந்தேன்.  அவர் சொல்வளர்க்காடு , கிராதம், இமைக்கணம் இங்கிருந்து ...