Posts

கவிதை எழுதச் சொல்லும் ஜான் சுந்தரின் கவிதைகள்

        இலக்கியம் வாசிப்பதன் பயனாக அழகியல் அனுபவம் கிடைக்கலாம், ஆன்மீகப் பிரக்ஞை மேம்படலாம். இவற்றுடன் எழுத வேண்டும் என்ற அகத்தூண்டுதல்களையும் இலக்கிய படைப்புகள் சில நேரம் வழங்கவும் செய்யலாம். இவ்வாறு அகத் தூண்டல்களை வழங்கும் கவிதைகளை எழுதக்கூடியவர் ஜான் சுந்தர்‌          பொதுவாகவே அகம் நோக்கி அதிகம் பேசும் நம்முடைய பெரும்பாலான கவிதைகள் இடையே இவருடைய படைப்புகள் புறம் நோக்கிப் பேசுபவை. .  இசை, இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் கவிதைகளில் இடம்பெறும் புற உலக காட்சிகள் தான் ஜான் சுந்தர் கவிதைகளிலும் இடம்பெறுகின்றன.            ரவிக்கைச் சுகந்தம் என்னும் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்துள்ளது.     ஏ டி எம் வளாகத்தைக் காவல் காப்பவர், பெயிண்ட் அடிப்பவர், என கீழ் நடுத்தர மக்களின் பாடுகளை எழுதுகிறார். கவிதைகளில்  உணர்ச்சியை மீட்டும் இவருடைய முயற்சிகள் பிரான்சிஸ் கிருபாவையும் ஞாபகப்படுத்துகின்றன.‌ ஓர் எடுத்துக்காட்டு.     ஏதிலிகளின் ஆண்டவரே     உமது ஜெபக்...

முப்பத்தாறு ரத்தினங்கள்

மதிப்பிற்குரிய மூத்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் கிழக்கு டுடே இதழில் முப்பத்தாறு ரத்தினங்கள் என்ற பெயரில் தொடர் எழுதுகிறார்கள். முதன்மையான நாவல்களை அறிமுகப்படுத்தி அவற்றின் கலைப் பெறுமதியை  ஆராயும் தொடர். . எஸ் வி வி , அனுத்தம்மா என 50களில் செயல்பட்ட எழுத்தாளர்களின் முதன்மை படைப்புகள், அவர்களின் இலக்கியச் சாதனைகள் என கட்டுரைகள் அமைந்துள்ளன. முதன்மையான ஒன்றை நுட்பமாகச் சொல்லிவிட்டு முதன்மையற்றவற்றை மௌனமாகக் கடந்து விடுவது எழுத்தாளர் எஸ் வி வி அவர்களின் இயல்பாக உள்ளது. அவ்வாறே கதை மாந்தர்கள் மீது உளவியல் வெளிச்சத்தைப் பாய்ச்சாமல் கதைச்சூழலைப்  புரியவைக்க  உளவியலின் ஒளியைப் பயன்படுத்துவது அனுத்தமா அவர்களின் கலைத் திறனில் மிளிர்கிறது. இத்தகைய கட்டுரைகளின் பெரும் பயன் என்பது இவை நாம் அறியாதவாறு நம்முடைய ரசனைத் திறனை மேம்படுத்தி விடும் என்பது தான் . நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன். 

சுய முன்னேற்ற நூல்களும் நானும்

சுய முன்னேற்ற நூல்களுக்கும்  எனக்கும் நடுவில் அமைந்த உறவு விந்தையானது. 20 களில் என்னுடைய  நூலக அடுக்கில் நிறைந்திருந்த சுய முன்னேற்ற நூல்களை  நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேற 30 நிமிடங்கள்  என்பது முதலாக உங்களுக்குள் இருக்கும் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?  முதலிய  புத்தகங்கள். 30 களில் எனது மனப்போக்கு தலைகீழாக மாறியது. சுய முன்னேற்ற நூல்களைப் படித்து மேம்படுத்திக் கொள்ளும் அளவுக்கு எனக்குரிய சிக்கல்கள் எளிமையானவயா என்ற கேள்வி.  அதன் பிறகு சுய முன்னேற்ற நூல்களைப் பற்றியும் அவற்றை வாசிப்பவர்கள் குறித்தும் மெல்லிய ஏளனம். ஆனால் 40 களில் மறுபடியும் சக்கரம் சுழன்றுவிட்டது.  Book share. Org என்ற இணைய முகவரியில் செயல்படும் நூலகம் உலகெங்கும் வாழும் பார்வையற்ற வாசகவர்களின் சொர்க்கம்.  பணி வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நான் மிகுந்த மனச்சோர்வுக்கு உட்பட்டிருந்த காலம். அப்போது ஒரு நாள் அந்த நூலகத்தில் Michael D Yakub என்ற மருத்துவர் எழுதிய depression is contagious மனச்சோர்வு  பரவக்கூடியது என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. ...

பேயோட்டும் வழி

தகவல் தொடர்பு சாதனங்கள் நம்மை எந்த அளவிற்கு இணைக்கின்றனவோ அதே அளவிற்கு சில புதிய சிக்கல்களையும் கொண்டு வருகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் இந்தச் சிக்கலிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்று தான் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நானும் இந்தப் பலரில் ஒருவன் தான். விலைமதிப்பற்ற பொழுதுகள், படைப்புத்தருணங்கள் அலைபேசி திரையில் வரும் சில செய்தி அறிவிப்புகளால் வீணாகியிருக்கின்றன.  நானும் இந்தச் செய்தி அறிவிப்புகளை என் அலைபேசியின் ஹோம்ஸ்கிரீனிலிருந்து விலக்க என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்தேன். மாணவர்களையும் கேட்டேன். எதுவும் நடக்கவில்லை.  இன்று அபிஷேக்கிடம் கேட்டபோது அவன் இந்த பேயை மரத்தில் எப்படி ஆணி அறைந்து கட்டி வைப்பது என்று அதனிடமே கேட்டான். google அறிவிப்புகளை எப்படி நிறுத்துவது என்று கூகுள் செய்து கேட்டான். என்னை இப்படிக்கட்டிப் போடலாம் என்று பேயே வழியையும் சொல்லிக் கொடுத்தது.  நம்முடைய அலைபேசியில் உள்ள கூகுள் அப்ளிகேஷனை திறக்க வேண்டும். அதில் செட்டிங்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள் செல்ல வேண்டும். அதில் அதர்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள்ளும் செல்ல வேண்டும். அதி...

இவர்கள் வாழ்ந்தார்கள்

எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதையில் இப்படி ஓர் இடம் வருகிறது. அவருடைய வீட்டிற்கு இரண்டு இளம் அதிகாரிகள் வருகிறார்கள். ஒருவர் வங்கியின் மேலாளர், மற்றொருவர் அக்கவுண்டன்ட். . அக்கவுண்டன்ட் முகத்தை பார்த்தவுடன் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று எஸ் எல் பைரப்பாவிற்குத் தோன்றுகிறது. ஆனால் எங்கே என்றுதான்  நினைவிற்கு வரவில்லை. தான் ஒரு நடுத்தரவர்க சம்பளதாரர் என்று எவ்வளவோ கூறிய நிலையிலும் அந்த அக்கவுண்டன்ட் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று எஸ் எல் பைரப்பா அவர்களை மிகவும் வற்புறுத்த வேறு வழியே இல்லாமல் இவரும் சம்மதிக்கிறார். ஒரு நாள் காலை தாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ் எல் பைரப்பா அவர்கள் சென்றபோது அககவுண்டன்ட் வர காலதாமதம் ஆகிவிட்டது. 13 நிமிடங்கள் கால தாமதமாக வங்கிக்கு வந்த அந்த இளம் அதிகாரி அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு தம்முடைய பணியை ஆரம்பிக்கிறார். அப்போதுதான் அந்த இளம் அதிகாரி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மகன் என்று எழுத்தாளர் எஸ் எல் பைரப்பா அவர்களுக்குத் தெரிய வருகிறது.  இவர்கள் வாழ்ந்தார்கள்,  இவர்...

அந்தப் புறாக்கள்

என்னுடைய கல்லூரிக் காலகட்டம். என் ஆசிரியர் சா. பாலுசாமி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எழுத்தாளர் ஜி நாகராஜன் குறித்து ஓர் உரையாற்றினார். தற்செயலாக ஒரு நாள் ஆசிரியர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது  கட்டில் மீது காலச்சுவடு இதழ்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.                         காலச்சுவடு இதழை நான் முதலில் பார்த்த ஞாபகம் அதுதான். என்னுடைய முதுகலைக் காலகட்டத்தில் காலச்சுவடு இரு மாத இதழாக மறுபடியும் வெளிவரத் தொடங்கியிருந்தது.            அவ்வப்போது காலச்சுவடு இதழை வாசிக்க முயன்றதுண்டு. அண்மையில் ஓராண்டு சந்தா கட்டி இணைய வழியில் இதழை வாசித்து வந்தேன். ஆனால்  தொடர்ச்சி விடுபட்டுவிட்டது. இப்போது முயன்று ஐந்தாண்டு சந்தா கட்டிவிட்டேன். ஓர் இலக்கிய இதழ் தொடர்ந்து வாசிக்க கிடைப்பதென்பது மகிழ்ச்சியான விஷயம் இல்லையா,  என் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவது போல  எழுத்தாளர் எம் கோபாலகிருஷ்ணன் எழுதிய முடிய சாளரம் என்ற சிறுகதை மே மாத இதழில் வெளிவந்துள்ளது.    ...

கையசைத்துச் செல்கிறது காலம்

ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்ற காலத்தில் வந்த தேர்தல் முடிவுகளையொட்டி ஜெயலலிதா முதலமைச்சரானார். தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டுவிட்டு வந்து நான் என் அப்பாவிடம் பரபரப்பாகக் கூறினேன். அப்பா வரட்டும்,வந்து ஆட்சி செய்து காட்டட்டும் ! என்று எரிந்து விழுந்தார்.           அடுத்த தேர்தலுக்குப் பிறகு விஜய் ஆட்சிதான் ! என்று என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ சொன்னபோது எனக்கும் எரிச்சலாக இருந்தது என் அப்பாவைபோல!  அப்பாவின் இளம் வயதிலேயே அவருடைய அப்பா ‌ காலமாகிவிட்டார். அறிஞர் அண்ணா இறந்த நாளில் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஒரு லாரியில் தொற்றி ஏறி ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் கேம்ப் என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து அண்ணாவின் உடலைப்  பார்த்துவிட்டுப் போன என்னுடைய அப்பாவைப்  பற்றி அலுவலகத்திலேயே சட்டையை கழற்றி விட்டு சந்தியா வந்தனம் செய்யும் அளவு மரபு வழிப்பட்ட என்னுடைய தாத்தா அறிந்திருந்தால் என்ன செய்திருப்பார், என்னைப் போலவும் என்னுடைய அப்பாவை போலவும் அவரும் எரிச்சலடைந்திருப்பாரா என்ன?     எங்கள் வீட்ட...