Posts

Showing posts with the label மெட்ராஸ் பேப்பர்

ஒரு பட்டியல் ஒரு பரிந்துரை

இன்று புதன்கிழமை ஜனவரி 24 2024 மெட்ராஸ் பேப்பர் இதழில் நான்கு குறுங்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர்கள் பா ராகவன், என் சொக்கன், ந ஜெயரூப லிங்கம், சௌமியா ஆகியோரின் படைப்புகள். பேய் ,தெய்வம், ஆன்மீகம், புராணம் ஆகிய களங்களில் கதைகள்.  சௌமியாவின் கதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. சுக்ரீவனுக்கு கிட்கிந்தை  அமைந்த உடன் தாரை அவனுடைய மனைவியாக அமைகிறாள். சுக்ரீவனின் மனைவியை வாலி அபகரித்தான் என்ற காரணத்தினால்,  இராமன் வாலியை மறைந்து நின்று கொல்ல முயல்வது ஏற்கனவே தாரைக்குத் தெரிந்து விட்டது. அவள் சுக்ரீவனின் மனைவியைக்  கேட்காமல்  அவள் அபகரிக்கப்பட்டாள் என்று இராமன் நினைப்பது முறையல்ல,  ஆண்கள் எல்லாம் சபலக்காரர்கள், பெண்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்று இராமனை எச்சரிக்கிறாள். இராமன் கேட்கவில்லை. இராவணனை வென்று இராமன் மீண்டும் கிக்கிந்தை திரும்புகிறான். அப்போது, சுக்ரீவனின் மனைவியாக மட்டுமல்ல பட்டத்தரசியாகவும் இருந்து இராமனுக்கு விருந்தில் உணவு பரிமாறும் தாரை ஆண்கள் எல்லாம் சபலக்காரர்கள், பெண்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் இதில் சீதையும் விதிவிலக்கல்ல என்று கூறுவது இர...

எனக்குப் பிடித்த மெட்ராஸ் பேப்பர்

. பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் பா ராகவன் எழுதிய டாலர் தேசம் என்ற புத்தகம் மிக மிகப் பரபரப்பாக பேசப்பட்டது‌  சென்னை புத்தகக் கண்காட்சியில் அதை  தூக்கி கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் கீழே வைத்து விட்டேன்.  ஒரே காரணம் தான். பாட புத்தகங்களைப் படிக்கவே பலருடைய உதவியை நம்பி இருக்கும் எங்களுக்கெல்லாம், அவ்வளவு கனமான புத்தகத்தை யார் வாசித்துக் காட்டுவார்கள்?    டாலர் தேசம் புத்தகத்தை பெருந்தொற்று காலகட்டத்தில் கிண்டிலில் படித்தேன். தனியாக இருக்க நேர்ந்த நாட்களில் அவருடைய யதி நாவலைப் படித்தேன். பிறகு அவருடைய சில அரசியல் வரலாற்று நூல்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுத வேண்டும்.  2022ம் ஆண்டில் மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. 2023 ஜனவரி முதல் தேதி நான் செய்த முதல் காரியம் மெட்ராஸ் பேப்பருக்கு ஆண்டுச்சந்தா கட்டியதுதான்.  அதில் வரும் உலக அரசியல் பற்றிய கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சப்ராஸ் அகமது எழுதும் கட்டுரைகள் மூலம் இலங்கை அரசியலை தொடர்ந்து அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவர் மற்ற நாடுகளின் அரசியல் விவகாரங்களையும் கட்டுரையாக எழு...