Posts

Showing posts from June, 2026

முப்பத்தாறு ரத்தினங்கள்

மதிப்பிற்குரிய மூத்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் கிழக்கு டுடே இதழில் முப்பத்தாறு ரத்தினங்கள் என்ற பெயரில் தொடர் எழுதுகிறார்கள். முதன்மையான நாவல்களை அறிமுகப்படுத்தி அவற்றின் கலைப் பெறுமதியை  ஆராயும் தொடர். . எஸ் வி வி , அனுத்தம்மா என 50களில் செயல்பட்ட எழுத்தாளர்களின் முதன்மை படைப்புகள், அவர்களின் இலக்கியச் சாதனைகள் என கட்டுரைகள் அமைந்துள்ளன. முதன்மையான ஒன்றை நுட்பமாகச் சொல்லிவிட்டு முதன்மையற்றவற்றை மௌனமாகக் கடந்து விடுவது எழுத்தாளர் எஸ் வி வி அவர்களின் இயல்பாக உள்ளது. அவ்வாறே கதை மாந்தர்கள் மீது உளவியல் வெளிச்சத்தைப் பாய்ச்சாமல் கதைச்சூழலைப்  புரியவைக்க  உளவியலின் ஒளியைப் பயன்படுத்துவது அனுத்தமா அவர்களின் கலைத் திறனில் மிளிர்கிறது. இத்தகைய கட்டுரைகளின் பெரும் பயன் என்பது இவை நாம் அறியாதவாறு நம்முடைய ரசனைத் திறனை மேம்படுத்தி விடும் என்பது தான் . நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன்.