Posts

Showing posts from October, 2023

என்னுடைய வாசிப்பு முறைகள்

நாம் எப்படி வாசிக்கிறோம்? என்பது குறித்து யோசித்திருக்கிறோமா, நான் பெரிதாக யோசித்திருக்கவில்லை.  ஒரு கட்டுரையில் புனைவை கற்பனையால் விரிக்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல எனக்குள் ஒரு வெளிச்சம்.  அதன் பிறகு புனைவை வாசிக்கும் போது கற்பனை செய்யப் பழகினேன். உதாரணமாக, நதியில் படகு மெல்ல அசைந்து சென்று கொண்டிருக்கிறது. படகின் அமர முனையில் ஒருவன் நின்றிருக்கிறான். காற்று அவன் கூந்தலை மெல்ல அசைக்கிறது.  இப்படிப்பட்ட வரிகள் வெண்முரசில் வரும்போது நான் அவற்றை கற்பனை செய்து கொள்வேன். கம்பனையும் இப்படித்தான் வாசிக்கிறேன். எல்லா நேரத்திலும் அல்ல, எல்லா கவிதைகளையும் இப்படியே வாசிக்கிறேன் என்று திட்டவட்டமாக சொல்லவும் முடியாது. சில கவிதைகளில் சந்த இனிமை, சொல்லாட்சி, அழகிய அணிகள் இவை சிறப்பாக இருக்கும். அப்போது நான் அவற்றில் இயன்றவரை கரைந்து போக விரும்புவேன். விரும்புவேன் அல்லது விரும்புகிறேன் என்று சொல்ல முடியுமே தவிர அவ்வாறு செய்ய எல்லா  நேரத்திலும் முடிகிறது என்று சொல்ல முடிவதில்லை  .  போரும் அமைதியும் நாவலின்முதல் பகுதி மட்டும்  வாசித்திருக்கிறேன்.  ஆடம்பரமான விருந்துகள் மட்டுமல்ல சிப்பாய்

தேவதை

காட்டுக் கோயிலில்  உக்கிர தேவதை,  கண்மூடிக் கவிழும் பக்தன் காரித் துப்பியபடி தொலைவில் நடக்கிறான் வழிப்போக்கன்           ( 2009 க்கு  முன்பு எழுதியது) 

அறிவுவானில் ஓர் அழகிய குருகு

நான் விரும்பி வாசிக்கும் இணைய இதழ்களில் குருகு இணைய இதழும் ஒன்று. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குருகு இணைய இதழில் இரண்டு முக்கியமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் எழுதியுள்ள  மனம் குறித்த கட்டுரையை திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே குரு நித்ய சைதன்ய யதி  கட்டுரையை இந்திய உளவியல் என்ற பெயரில்  நண்பர் அழகிய மணவாளன் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.  தொடங்கிய நாள் முதல் குருகு இதழ் மிகத் தீவிரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கலை, தத்துவம் உள்ளிட்டத் துறைகளில் வெளிவரும் குருகு இதழின்  கட்டுரைகள் நமது ஆய்வுகளிலும் சிந்தனைகளிலும் பல புதிய திறப்புகள் ஏற்பட நிச்சயம் வழிவகுக்கும். இன்னும் பத்து வருடங்களில் இதழின் பங்களிப்பு தமிழின் அறிவுச் சமூகத்தால்  அங்கிகரிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன். ஆசிரியர்க் குழுவில் இடம்பெற்றுள்ள  நண்பர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிவேன். காலனீயத்தின் வடுவாக அறிவுலகில் ஒட்டியிருக்கும்  ஐரோப்பிய மைய நோக்கை மெல்லமெல்ல அகற்ற முயல்கிறீர்கள். மகத்தான பணி! .  இதழ் மென்மேலும் சிறக்க நாம் எல்லோரும் பங்களிப்போம

இருக்கிறது, ஆனால் தொலைவில்

  ஒருபால் திருமணம் குறித்த வழக்கை மாண்பமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது, நாடாளுமன்றமே இது தொடர்பாக  தீர்மானம் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று  மாண்பமை உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.   வருத்தமாக இருக்கிறது  இது. மத விழுமியங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் பொதுவாக அரசியல் கட்சிகள் குறிப்பாக தற்போதய ஆளும் கட்சி ஈடுபடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது .  நாடாளுமன்றத்தில் திரு சசிதரூர் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை  காங்கிரஸ் கட்சியே ஆதரிக்காதநிலையில் பாஜ க பற்றிப் பேசுவதே பிழை.  எனக்கு ஒரு மாணவரைத் தெரியும். பெண்களுடன் இருப்பதிலேயே அவர் நிறைவாயிருந்தார். பெண்களும் அவரை அவ்வளவு நெருக்கமாக உணர்ந்தார்கள். அவர் வீட்டில் பெண்களின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறார் என்ற செய்தி அப்புறம் தெரியவந்தது. அவர்களைப் போன்றவர்களுக்கு நாம் சொல்லும் செய்திதான்  என்ன?  ஒருவர் தம்மை எப்படி உணர்கிறார் என்பது முற்றிலும் அவர் கையில் தான் இருக்கிறது என்று சொல்வது தவறு. . அது அவரையும் கடந்தது.  நாம் ஒருவரை எப்படி அழைக்க வேண்டும் என்பதைக் கூட அவரிடம் கேட்டுவிட்டுத்  தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையை நோக்கி

யமுனாவின் பொற்கணங்கள்

நமது பல்கலைக்கழக தமிழ்த்துறை  சார்பில் ஒவ்வொரு வாரமும்  புதன் கிழமையன்று வாராந்தரக் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பேராசிரியர் தமிழவன் அவர்களின் கனவு.  தொடக்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடத்திவந்தோம். புதன்கிழமை வசதிப் பட்டதால் மாற்றிவிட்டோம். ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் எல்லோரும் கலந்துகொள்கிறோம். இதனை புதன் வட்டம் என்று அழைக்கிறோம். பேராசிரியர் தமிழவன் காலத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களின் மதியவேளைகளில் வெவ்வேறு பெயர்களில் இது நடைபெற்று வந்தது.  புதன் வட்டத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம், ஆய்வுக் கட்டுரைகளும் வாசிப்போம்.   தற்போது எங்களின்  புனைவுகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.  முற்றிலும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்துகிறார்கள். இந்தப் பயிற்சியின் விளைவாக மாணவர்களின் மேடை வெளிப்பாடுகள் மேம்படுவதைக் காணமுடிகிறது.  அக்டோபர் 18 புதன்கிழமையன்று எங்கள் மாணவி யமுனா பொ. வேல்சாமி எழுதிய "பொற்காலங்களும் இருண்ட காலங்களும் "என்ற கட்டுரைத் தொகுப்பை அறிமுகப்படுத்திப் பேசினார். யமுனா தொல

கேள்வி 2

  அப்படி என்னதான் பேசிக் கொள்ளும்?  சாவை நோக்கிய  சைக்கிள் பயணத்தில் கோழிகள்!  ( 2005 க்கு முன் எழுதப்பட்டது) 

பவபூதியும் இரா முருகனும்

தீ நம் ஸ்ரீ கண்டய்யா என்ற பேராசிரியர் கன்னட மொழியில் பாரதிய காவிய மீமாம்சே  ( இந்தியக் கவிதையியல்) என்ற நூல் இயற்றியிருக்கிறார். இந்த நூல் பற்றி  விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது பவபூதி பற்றி மட்டும். அதிலும் அவர் எழுதிய ஒரேயொரு கவிதை பற்றி மட்டும்.  உத்தர ராம சரிதத்திலிருந்து இந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் ஸ்ரீ கண்டய்யா அவர்களால் தரப்படுகிறது.  சீதையை ஐயுற்றுக் காட்டுக்கு அனுப்பி விட்டு நெடுங்காலம் கழித்து இராமன் காட்டுக்கு வருகிறான்.  இராமனும் சீதையும் எவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்தார்கள் என்பதை அறிந்திருந்த வாசந்தி என்ற வனதேவதை காட்டில் இராமனைப் பார்த்து  கோபத்தில் இப்படிச் சொல்கிறாள்.   நீயே உயிர்,  இன்னொரு இதயம்,  கண்களுக்கு வெண்ணிலவு, உடலின் அமுதம்!  என்று பேசி மேலும் சொல்லி என்?  என்றபடி வாஸந்தி மயங்கி விழுந்துவிடுகிறாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தமசா என்ற நதி தேவதை இராமனை வாசந்தி பார்த்ததும் ,கேட்டதும் மயங்கிவிழுந்ததும்கூட  சரியான தருணத்தில் நிகழ்ந்ததல்லவா என்கிறாள்.  வாசந்தி மயங்கி விழுவது அவளுக்கு இராமன் மேல் எவ்வளவு கோபமும் சீதை மீது எவ்வளவு நேசமும் இர

கேள்வி 1

ஆளற்ற சாலை,  எந்தப் பேருந்துக்காகக்  காத்திருக்கின்றன மின் கம்பங்கள்  1999 _காலகட்டத்தில் எழுதியது) 

எனக்குப் பிடித்த அருஞ்சொல்

திரு சமஸ் நடத்தும் அருஞ்சொல் இதழ் நான் விரும்பி வாசிக்கும் இதழ்களுள் ஒன்று. திரு சமஸ் அவர்களின் காந்திய ஈடுபாடு எனக்கு அவர் மீது மதிப்பு வரக் காரணம். ராமச்சந்திர குகா, பாலசுப்ரமணியம் முத்துசாமி உள்ளிட்டவர்களின் கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பேன்.  மெட்ராஸ் பேப்பரைப் போல இந்த இதழிலும் வெளிவரக்கூடிய உலக  அரசியல் பற்றியக்  கட்டுரைகளை கண்டிப்பாக வாசித்து விடுவேன். பன்னாட்டு அரசியல் குறித்த எழுத்துக்கு தமிழில் நிறைய தேவை இருப்பதாகக் கருதுகிறேன் கவனிக்கப்படாத சென்னை பகுதிகள் பற்றி வெளிவரும் கட்டுரைகளும் எனக்குப்  பிடிக்கும். அதே சமயம் இதழில் வெளிவரும் தீவிர பாஜக எதிர்ப்புக் கட்டுரைகளைத் தவித்து விடுவேன். யோகேந்திர யாதவ் கட்டுரைகள் மட்டும் இதில் விதிவிலக்கு.  அருஞ்சொல் இதழ் மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார விரும்புகிறேன், இரண்டு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் அருஞ்சொல் இதழை வாழ்த்துகிறேன்! . 

இவருக்கு எத்தனை கரங்கள்?

நண்பர் பொருநை க .மாரியப்பனுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்ப்பில் ஈடுபாடு அதிகரித்தது. மகாவித்வான் என்ற அவருடைய முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.   அதன் பிறகு படிக்கட்டுகளில் பாய்ந்து ஏறுகிறார்.  தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் சிறுகதைகளை அத்தங்கிமலை என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். எதிர் வெளியீடு. இந்தத் தொகுப்புக்கு அருட் செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மகாத்மா பிறந்த நாள் . சென்னையில் நண்பருக்கு பரிசு வழங்கப்படுகிறது. மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை முடித்து தமிழின் முதன்மையான பதிப்பகம்  ஒன்றின் மூலம் வெளியிடயிருக்கிறார். இன்னொரு மொழிபெயர்ப்பு நாவல் பாதி நிறைவடைந்த நிலையில் இருக்கிறது. சாகித்ய அகாடமிக்காக மற்றொரு   மொழிபெயர்ப்பு சிறுகதைத்  தொகுப்பு வெளிவரவிருக்கிறது. மதுராந்தகம் நரேந்திரா எழுதிய புகழ்பெற்ற நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு முயற்சி வேறொருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோக பேராசிரியர் பி .திருப்பதி ராவ் எழுதிய நூல் ஒன்றை தமிழ்ப்படுத்தும் முயற்சி.  (கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்கிறேன்) பல்கலைக்கழ