எனக்குப் பிடித்த அருஞ்சொல்

திரு சமஸ் நடத்தும் அருஞ்சொல் இதழ் நான் விரும்பி வாசிக்கும் இதழ்களுள் ஒன்று. திரு சமஸ் அவர்களின் காந்திய ஈடுபாடு எனக்கு அவர் மீது மதிப்பு வரக் காரணம். ராமச்சந்திர குகா, பாலசுப்ரமணியம் முத்துசாமி உள்ளிட்டவர்களின் கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பேன்.  மெட்ராஸ் பேப்பரைப் போல இந்த இதழிலும் வெளிவரக்கூடிய உலக  அரசியல் பற்றியக்  கட்டுரைகளை கண்டிப்பாக வாசித்து விடுவேன். பன்னாட்டு அரசியல் குறித்த எழுத்துக்கு தமிழில் நிறைய தேவை இருப்பதாகக் கருதுகிறேன் கவனிக்கப்படாத சென்னை பகுதிகள் பற்றி வெளிவரும் கட்டுரைகளும் எனக்குப்  பிடிக்கும். அதே சமயம் இதழில் வெளிவரும் தீவிர பாஜக எதிர்ப்புக் கட்டுரைகளைத் தவித்து விடுவேன். யோகேந்திர யாதவ் கட்டுரைகள் மட்டும் இதில் விதிவிலக்கு.  அருஞ்சொல் இதழ் மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார விரும்புகிறேன், இரண்டு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் அருஞ்சொல் இதழை வாழ்த்துகிறேன்! . 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்