வாழ்த்துக்கள்
பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷ் முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கிறார். இலக்கியத் திறனாய்வு, ஆய்வு, தொகுப்பு என பல நிலைகளில் பங்களித்து வருகிறார். பேராசிரியர் வீ. அரசு அவர்களின் மாணவர்.
அண்மையில் சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள தமிழில் தலித்தியம் என்ற நூலுக்கு பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்பெறும் பஞ்சு பரிசில் 2023 வழங்கப்படுகிறது.
பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களினைச் சிறப்பிக்கும் வண்ணம் நடைபெறும் பஞ்சு 75 விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.
பிப்ரவரி நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை ரோஜா முத்தையா நினைவு நூலக வளாகத்தில் விழா நடைபெறுகிறது. நண்பர் இன்னும் நிறைய நிறைய அங்கீகாரங்களைப் பெறவேண்டும்.
வாழ்த்துக்கள் இரமேஷ்!
Comments
Post a Comment