Posts

Showing posts from December, 2023

484 ாழ்த்துக்கள் பத்மநாபன்

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதில் எனக்கு  விருப்பம் அதிகம். ஒரு நாட்குறிப்பில் வேலைகளை எழுதி வைத்து அவற்றை செய்து முடித்தவுடன் டிக் செய்து கொள்வது, ஒவ்வொரு வாரமும் மொத்தமாக கணக்கிட்டு செய்து முடித்த வேலைகளுக்கு ஏற்ப எனக்கு நானே மதிப்பெண் வழங்கிக் கொள்வது எல்லாம் நினைவிருக்கிறது. அக்கா அதனை எடுத்து எனக்கு நானே போட்டுக் கொள்ளும் மதிப்பெண்களுக்காக என்னை கேலி செய்ததுண்டு. அக்கா அல்ல இன்னொரு அம்மா என்று அவளை நான் உணரத் தொடங்கி இருந்தபோது நான்  சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வதில் விருப்பம் கொண்ட எனக்கு எழுதுவது மட்டும் கை கூடவே இல்லை. ஒரு மகனாக, அப்பாவாக, ஆசிரியராக மகிழ்வு கொள்ளும் என்னால் என்னுடைய எழுத்துப் பங்களிப்புகள் பற்றி மட்டும் சொல்லிக் கொள்வதில் தயக்கமும் பதற்றமும் உண்டு.  2023 ஜனவரியின் தொடக்க நாட்கள் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் முன்னெடுக்க ஆயிரம் மணி நேர வாசிப்பு பணியில் நண்பர்கள் ஈடுபடத்தொடங்கினார்கள். கதிரவன் என்னை அழைத்து வாசிப்பு சவாலில் பங்கெடுத்துக் கொள்ள கேட்டுக் கொண்டபோது நான் தயங்

விண்ணில் விரியும் சிறகுகள்

கடல் பெரியது. அது எல்லா நதிகளையும் தன்னுள் சேர்த்துக் கொள்கிறது. வானம் பெரியது, ஏனென்றால் அது  நம் கற்பனையால் விரிகிறது.  உள்ளத்தை கடலென்றும், வாழ்வை வானென்றும் வகுத்துக் கொள்ளலாம்.   காலம் இடம் பற்றிய நமது பிரக்ஞையை கலைத்துப் போட்டு தாங்கள் விரும்பும் பிரபஞ்சத்தை படைக்க முயலும் படைப்பாளிகள் ‌ நட்சத்திரங்களைக் கொண்டு கழங்காடும் அரக்கர் குலப்  பெண்களாக கம்பனில் வெளிப்படுகிறார்கள். விண்ணில் பறந்து வந்து சிறுநீர் கழிக்கும் வயசங்களாக இரா .முருகன் நாவல்களில் மனிதர்கள் வருகிறார்கள்.  காலம், இடம், தர்க்கம் இவை கலைஞர்களுக்கு  உயிரல்ல, வெறும் அணிகலன்கள்  . 1800 காலகட்டத்தில் நடக்கும் கதை. ஆங்கில அரசு, சிதிலமடைந்த நில உடமை விழுமியங்கள் , வியாபாரமும் குமாஸ்தாத்தனமும்  கௌரவம் மிக்க பணிகளாக கருதப்படும் காலம்.  புகையிலை வியாபாரம் செய்யும் சுப்பிரமணிய ஐயர், சித்தம் பேதலித்த மூத்த மகன் சாமிநாதன்,  பக்கத்து வீட்டு ஜமீன்தார், இறந்த பிறகும் சம்போகம் தேடும்  கிழவர், அவ்வப்போது  வீட்டுக்கு வந்து போகும் மூத்தகுடிப் பெண்கள்  என்று தொடரும் நாவல்.   நாவலில் முக்கியமான மூன்று பெண்கள். தெய்வம் போன்ற விசாலாட்சி,

தனிச்சொல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்

தனிச்சொல் அமைப்பின் சார்பில்  நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளின் எழுத்தும் வாழ்வும் என்ற பொருளில் உரையாற்றினேன். பேராசிரியர் முருகானந்தம் மாற்றுத்திறனாளிகளின் கல்வி வாய்ப்புகள் குறித்தும் இன்றைய கல்விக் கொள்கையின் சாதக பாதகங்கள் குறித்தும் பேசினார். நண்பர் சரவண மணிகண்டன் இன்றைய ஊடகங்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்து குறிப்பாக பார்வையற்றவர்கள் பற்றி எப்படிப்பட்ட அறியாமையுடன் செய்திகளை வெளியிடுகின்றன என்பதில் நம் கவனத்தை கோறினார். எழுத்து சார்ந்த அச்சத்தை எழுதுவதில் உள்ள தயக்கத்தை எழுத்து என்றவுடன் தொற்றிக் கொள்ளும் பதற்றத்தை எவ்வாறு பயிற்சியால் சிறிது சிறிதாக கடந்து வந்து கொண்டிருக்கிறேன் என்பது பற்றி என் சொந்த அனுபவங்களை முன்வைத்துப் பேசினேன்.   மூத்த பேராசிரியர் சுகுமாரன் அவர்கள் பங்கேற்றது மிகவும் நிறைவைத் தந்தது. அவர் late( எல்லாமே தாமதமாக நடப்பது அல்லது அமைவது), low productivity (குறைவான உற்பத்தித்திறன்),, high cost of living (வாழ்வுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்குக் கூட கொடுக்கப்பட வேண்டிய மிகையான விலை) ஆகிய மூன்று சிக்கல்கள் ஒருவர் பார்வையற்றவர் என்பதாலேயே எப்படி

வருந்துகிறேன்

இரண்டு நாட்கள் கொட்டி தீர்த்த பெருமழையில் எவ்வளவோ சேதங்கள், தண்ணீர் புகுந்து விட்ட வீடுகள். எங்கள் வீடும் தண்ணீரில் மிதக்கிறது.  எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் பதிப்பகக் கிடங்கில் தண்ணீர் புகுந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சேதமடைந்து விட்டதாக எழுதியிருக்கிறார்.  ஒரு புத்தக தயாரிப்பு என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட தாள்களை அட்டை போட்டு ஒட்டுவது மட்டுமல்ல. ஆய்வு, எழுத்தாக்கம், எழுத்தை பண்படுத்துதல், அச்சாக்கம், விற்பனை,வாசக மருவினை என ஒரு புத்தகம் மேற்கொள்ள வேண்டிய பயணம் மிக அதிகம்.  எஸ். ரா எழுதியிருக்கிறார். மற்ற சிறிய பதிப்பாளர்கள் என்னென்ன சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ?  இன்னும் ஒரு மாதத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி. நெருக்கடியான நாட்கள் தான்.  அவருடைய எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவன் என்ற வகையில்  ஆத்மார்த்தமாக எஸ். ராவுடன் இருக்கிறேன்.  மீட்டு விடலாம் எஸ் ரா

கயிற்றில் நடக்கும் கலை

Image
எழுத்தாளர் பா .ராகவனின் 'ரெண்டு' என்ற நாவல். சற்றே கால் இடறினாலும் கயிற்றிலிருந்து கீழே விழும் ஆபத்தான பயணம் தான். அவந்திகா என்ற பிராமணப் பெண் மனோஜ் ,விக்டர் என்ற இருவர் மீதும் காதல் கொள்கிறாள். இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறாள். தொடர்ந்து என்ன நிகழ்கிறது என்பதே கதை.  பேராசிரியர்களாகப் பணியாற்றும், தங்களின் அறிவையும் ஆளுமையையும் அதிக அளவு நம்பிச் செயல்படும் மூன்று பேரின் வாழ்க்கை நிகழ்வுகள் நாவலாக புனையப்பட்டிருக்கின்றன.  திருவானைக்கோயில்  பற்றி எழுதும் போதும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளைப் பற்றி விவரிக்கும்போதும் பா.ராவின் எழுத்து சிறப்பாகவே வந்திருக்கிறது. பெருநகரங்களுக்கு பக்கத்திலிருக்கும் சிறு பகுதிகள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடுவதுபோல அவந்திகா தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்றும் நாம் நாவலை  வாசிக்கலாம்.  வெளிநாட்டுப் பயணத்திலிருக்கும் அவந்திகாவின் விமானம் கடத்தப்படுகிறது. தனது கடந்த கால வாழ்க்கை பற்றிய அவளது நினைவுகளே இந்த நாவவ்.  அவந்திகா, அரசு ஊழியரான அவளுடைய அப்பா, ஆச்சாரமான தாத்தா, பொதுவாக சிறிய ஊர்களில் அதிகம் கா