பனிமலர் வாழ்க!

இன்று  எங்கள் புதன் வட்ட நிகழ்வில் வ பனிமலர் துப்பட்டா போடுங்கள் தோழி என்ற கீதா இளங்கோவனின் நூலை அறிமுகப்படுத்தினார்.  மலர் நமது தமிழ்த்துறையின் ஆய்வு மாணவி. நூல் குறித்த தமது கருத்துக்களை பனிமலர் எழுதி வந்திருந்தமை சிறப்பு‌ . பெண்ணியம் குறித்து தீவிரமான உரையாடல்கள் நடைபெற்றன. அண்மையில் விவாதப்  பொருளான ஒருபால் திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. நானும் நிகழ்வில் பங்கேற்றேன். நண்பர் விஷ்ணு குமரனும் சில கருத்துக்களை தீவிரமாக முன் வைத்தார்.பனிமலர் மேலும் மேலும் சிறந்த நூல்களை அறிமுகப்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். மகள் மீது அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் பனிமலரின் அப்பாவுக்கு என் அன்பு. பனிமலர் வாழ்க.! 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்