Posts

ஒரு நாடகம் மறுபடியும் நிகழ்கிறது

2006 அல்லது 2007 ஆக இருக்கலாம்  குப்பத்தில்  ஒரு முடி திருத்தும் கடைக்குச்  சென்றிருந்தேன். குப்பம் போன்ற சிறிய ஊர்களில் ஒருவருக்கு உபயோகித்த பிளேடையே  இன்னொருவருக்கும் உபயோகிப்பதாக ஒரு புகார்  பொதுவாக சொல்லப்படுவதுண்டு.  கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடையில் இருந்தார். அவர்தான் எனக்கு வேண்டியதைச் செய்தார்.   அவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் வந்திருந்த ஞாபகத்தில் விசாரித்தேன். அவரும் எனக்குப் பிடித்த கன்னட பாடலை ஞாபகம் வைத்திருந்து ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தார். நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். 10 நிமிடங்கள் கழிவதற்குள் நான் வாங்கி வந்தும் பிரிக்கப்படாத பிளேடை சுட்டிக்காட்டி நான் பதற்றத்துடன் கேட்டபோது அவர் புதிதாக அடுக்கப்பட்டு இருந்த பிளேடு பொட்டலத்தை எடுத்து என் கைமீது அழுத்தினார். அவர் வேகமாக அழுத்தினார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன! அப்போது பத்மநாபனும் கிருஷ்ணமூர்த்தியும் அங்கில்லை.  2025 நவம்பர்  14.    பார்வையற்ற நிலையில் தன்னந்தனியே சாலையில் நடந்து செல்லும் என்னையும் ஜோதியையும் பார்க்கப் பெருமையாய் இருக்கிறது என்ற...

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதை புகழ்பெற்ற ஒன்று.  ‌ காலச்சுவடு இதழில் எஸ் எல் பைரப்பா அவர்களின் மறைவு சந்தர்ப்பத்தில் தாம் எழுதிய அஞ்சலிக்  கட்டுரையில் இந்த சுயசரிதை குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.   இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் வாழ்வை ஏதோ ஒரு வகையில் பிளேக் நோய் பாதித்திருக்கிறது. யூ ஆர் அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவலில் பிளேக் பற்றிய மனம் நடுக்கும் காட்சிகள் உள்ளன.   ‌ பைரப்பாவின் வாழ்க்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.  மரணங்கள் ,மரணங்கள் , மரணங்கள் ஒரே நாளில் இரண்டு மணி நேரத்திற்குள் அண்ணன் அக்கா ஆகியோரின் மரணங்கள். பிறகு சுசிலா என்னும் ஒன்றரை வயது தங்கையின் மரணம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு நாளில் வந்து சேரும் அம்மாவின் மரணச் செய்தி. அம்மாவின் மரணத்திற்கும் ப்ளேக் தான் காரணம். ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் இடம்பெறும் நஞ்சம்மா யாரும் இல்லை என்னுடைய அம்மா கௌரிதான் என்று பைரப்பா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். அம்மா இறந்து போன தருணத்தில் மனநிலைப் பிற...

அந்தக் கரம் அந்த மனம்

ஓர் ஊனமுற்ற குழந்தை மற்ற ஊனமுற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வளரும்  போது அது தன்னுடைய ஊனத்தைக் குறித்து நன்கு புரிந்து கொள்வது மட்டுமல்ல அதனை சிறப்பாக எதிர்கொள்ளவும் விரைவாகக் கற்றுக் கொள்கிறது. இது ஒரு பொதுவான உண்மை. அப்படி இல்லாமல் அந்தக் குழந்தை பொதுச் சூழலில் தனித்து வளரும் என்றால்  ஊனத்தை அது சரியாக கையாள தெரியாததன் காரணமாக மேலும் மேலும் உடல் சார்ந்த மனம் சார்ந்த வேதனைகளுக்கு உள்ளாகிறது.  பரமக்குடியில் நான் ஊனமுற்ற குழந்தையாக தன்னந்தனியே தான் வளர்ந்தேன்   பார்வையின்மை குறித்த விழிப்புணர்வு அந்த வயதில் எனக்கு போதுமானதாக இல்லாததால் பலவகை துன்பங்களுக்கு உள்ளானேன்.  எவ்வளவு சொன்னாலும் என்னால் மற்ற குழந்தைகளைப் போல தெருவில் விளையாட முடியாது என்பது எனக்குப் புரிந்ததே இல்லை . மற்ற குழந்தைகள் தெருவில் விளையாடும் போது  அம்மாவின் பார்வையிலிருந்து   தப்பித்து தெருவில் இறங்கிச் சென்று சாலையோர மின் கம்பங்களில் மோதிக் கொண்டு நெற்றி புடைக்க வீடு திரும்புவதும், தெரு நாய்களை மிதித்துவிட்டு அலறிக் கொண்டு ஓடி வருவதும் மிகச் சாதாரணமான நிகழ்வுகள்.  பட்டாசு ...

ஒரு யோகியின் பாதத்தில்

யோகம் சார்ந்த அறிமுக கட்டுரைகளை குறிப்புகளை எழுதலாம் என்று வணக்கத்திற்குரிய குருஜி அவர்கள் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இவை விவாதிப்பதற்காக அல்ல. வெறும் அனுபவப் பகிர்தல்கள். இன்னும் சொல்லப்போனால் இவை என்னுடைய அனுபவங்கள். இவை இந்த வினாடியில் உண்மையானவை என்பதன்றி இவற்றிற்கு பெரிய அளவிலான எந்த மதிப்பையும்  நான் வலியுறுத்தவில்லை. என்னை தம் மாணவனாக ஏற்றுக்கொண்டு யோகத்தை அருளிச்செய்த குருஜி சௌந்தர் அவர்களின் திருவடிகளுக்கு என் வணக்கங்கள். யோகம் சார்ந்த என்னுடைய சில புரிதல்களும் அனுபவங்களும் இனி குறுங்கட்டுரைகளாக இந்த வலைப் பக்கத்தில் இடம்பெறும். மற்ற மாணவர்கள் யோகத்தில் நம்பிக்கை கொள்வார்கள் என்றால் இந்த கட்டுரைகள் தம் நோக்கத்தை அடைந்து விட்டன என்றே பொருள். 

தித்திக்கும் தருணங்கள்

ஆசிரியர் தீ . ந.  ஸ்ரீ கண்டய்யா அவர்களின் "பாரதிய காவ்ய மீமாம்சே"   நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு குருகு இதழில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதி ஏழாவது அத்தியாயம் வெளி வந்திருக்கிறது. இந்த அத்தியாயத்துடன் மூன்று பகுதிகள் கொண்ட நூலில் முதற் பகுதி நிறைவடைகிறது. அவையடக்கமெல்லாம் கிடையாது, உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த நூலை நான் மொழிபெயர்க்கவில்லை, இந்த நூல் என் மூலமாக தன்னை தமிழில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதுதான் பொருத்தமானது.  உண்மையிலேயே இது ஒரு முக்கியமான பங்களிப்புதான். இதுவரை வெளிவந்துள்ள ஏழு அத்தியாயங்களை மட்டுமே கூட தொகுத்து, விரும்பினால் சிறிது "எடிட்"  செய்து நூலாக வெளியிடலாம்.  என் ஆசிரியர்களின் அருளால் இந்தப் பணி நடைபெறுகிறது. என் மாணவர்களின் அன்பால் நண்பர்களின் உடனிருப்பால் ஒரு கனவு நனவாகிறது.  குருகு நண்பர்கள் அபினாசி தாமரைக்கண்ணன், புதுவை தாமரைக்கண்ணன், அனங்கன் ஆகியோருடன் இந்தப் பணி தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடியிருக்கிறேன். எனக்கு இருந்த அகத்தடைகளை நான் கடப்பதற்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். நெருக்கட...

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

இலக்கியம் என்னவெல்லாம் கொடுக்கும், ஓர் உடம்பில் இருந்து கொண்டு ஓர் ஆயிரம்  வாழ்க்கையை வாழும் வாய்ப்பை!  அப்புறம் சில இனிய நினைவுகளை எப்போதும் நிறைவளிக்கும் உறவுகளை இவ்வாறு இலக்கியம் கொடுப்பவை அநேகம். .  நண்பர் சாகுல் ஹமீதிடம் அப்துல் வகாப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். பரமக்குடியில் மேலை முஸ்லிம் ஹைராப்த்துல் அலியா நடுநிலைப் பள்ளியில் 1988 89 ஆம் கல்வியாண்டில்  வகாபும் நானும்  ஆறாம் வகுப்பு படித்தோம். பார்வையற்ற மாணவன் என்பதால் என்னை வகுப்பில் முதல் வரிசையில் முதலில் உட்கார வைத்திருப்பார்கள். என்னுடன் வகாப் உட்கார்ந்திருப்பான். தாமஸ் யூரிக் காதரின் என்னும் மற்றொரு பையன் எங்களுடன் இருப்பான். முகமது அபுபக்கர், காத்தய்யா. மும்தாஜ் டீச்சர் வீட்டிற்கு எங்கள் அட்டையில் ரேஷன் வாங்கிக் கொண்டு போவேன். பணத்தை எண்ணி எண்ணி என் சட்டையில் வைத்துவிட்டு   அது எங்கும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குண்டூசியையும் டீச்சர் குத்தி விடுவார்.   ரிக்க்ஷாகாரர் வராத நாட்களில் என்னை வீட்டிற்கு கொண்டு வந்து விடும் பொறுப்பை வகாப் ஏற்றுக் கொள்வான்‌  இஸ்லாமியப் ப...

எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது

2025 ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட இருக்கிறது. ரமேஷ் பிரேதன் எழுதிய ஐந்தவித்தான் என்ற ஒரே ஒரு நாவலை மட்டும் படித்திருக்கிறேன். இரு பகுதிகளாக அமைந்த அந்த நாவல் முதல் பகுதி நேர்கோட்டு நிலையிலும் இரண்டாம் பகுதி அல் நேர்கோட்டு நிலையிலும் அமைந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய மற்ற படைப்புகளை முடிந்தவரை படிக்க வேண்டும்.   டிசம்பருக்குக் காத்திருக்கிறேன்!