எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது
2025 ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட இருக்கிறது. ரமேஷ் பிரேதன் எழுதிய ஐந்தவித்தான் என்ற ஒரே ஒரு நாவலை மட்டும் படித்திருக்கிறேன். இரு பகுதிகளாக அமைந்த அந்த நாவல் முதல் பகுதி நேர்கோட்டு நிலையிலும் இரண்டாம் பகுதி அல் நேர்கோட்டு நிலையிலும் அமைந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய மற்ற படைப்புகளை முடிந்தவரை படிக்க வேண்டும். டிசம்பருக்குக் காத்திருக்கிறேன்!