Posts

காக்கை குருவி எங்கள் ஜாதி

இன்று மாலை அது நடந்தது. வீட்டு வாசல் படித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அது மிகவும் சாதுவான நாய் . யாராவது புதியவர் வந்துவிட்டால் குறைத்துக் கொண்டே பயந்தபடி பின்னால் செல்லும் அளவுக்குச் சாதுவான நாய் தான்.  நாங்கள் அறிந்து  அது எந்த அத்துமீறலிலும் நடந்தது கிடையாது. அப்படி இருக்க ஒரு சேவலை கவ்விப் பிடித்துவிட்டது.   வீட்டு வாசலில்  வண்டியில் வளையல் விற்றுக் கொண்டிருந்தவர் வந்து விலக்கி விட்டார். பக்கத்து வீட்டுப் பையனும் நாயிடமிருந்து சேவலை விலக்கி விட உதவினான். பயந்து போய் வீட்டுக்கு  எதிரில் உள்ள ஒரு புதரில் சேவல் ஒளிந்து கொண்டு விட்டது. கொஞ்ச நேரம் கழித்து அதன் உரிமையாளர்கள் வந்து  தூக்கிக் கொண்டு சென்றார்கள். அப்போது சேவல் பலமாகக் கூவியது.  மூன்று சத்தங்கள்.  நாய் சேவலைக் கவ்வியத் தருணத்தில் சுமார் 25 காக்கைகள் ஒன்று சேர்ந்து சத்தமிடத் துவங்கிவிட்டன. ஓயவே இல்லை.  சிறிது நேரம் கழித்து சத்தம் இன்னும் அதிகரித்தது. கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் காக்கைச் சத்தம்.  இப்படி மூன்று முறை காக்கைகளின் உச்சகட்ட ஒலி.  முதல் முறை காக்கைகள் கரைந்தது  நாய் மீதான கண்டனம். காரணம் அப்படி ஒரு வ

மண் மடிப்புகளுக்கு இடையே

பென்யமின் மலையாளத்தில் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற நாவல் தமிழில் எஸ். ராமன் என்பவரால்  மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது.   ஆடு ஜீவிதம் நாம் கற்பனையும் செய்திருக்காத பாலைவன வாழ்க்கையை விவரிக்கும் நாவல்.  ஒரு தமிழ் மாணவனாக நான் அறிந்ததெல்லாம் பாலை நிலம் மட்டும்தான்.  நமக்கு பாலை என்பது வறண்ட மலையும் காடும் தான். உண்மையில் பாலைவனம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பெரும்பாலும் இல்லை , எனலாம்.  பாலை குறித்த விரிவான பதிவுகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம் வேட்டுவவரி என்ற பெயரில் பாலை நில வாழ்க்கையை முன் வைக்கிறது. வெண்முரசில் பாலை குறித்து விரிவாக வாசித்ததுண்டு. எழுத்தாளர் செல்வேந்திரன் பாலை நிலப் பயணம் என்று ஒரு பயண நூல் எழுதி இருக்கிறார். பாலை நிலம்/வனம் குறித்த என் வாசிப்பு இவ்வளவு தான்  இந்த வரிசையில் ஆடு ஜீவிதம் குறித்த மதிப்பீடு இது. பாலைவனம் குறித்த மிக விரிவான சித்திரத்தை வழங்கும் நாவல்  ஆடு ஜீவிதம்  அரேபியாவில் ஒரு கட்டட நிறுவனத்தில் வேலை என்று சொல்லி நசீபு அழைத்துச் செல்லப்படுகிறான். தான் துபாயில் இறங்கியவுடன் தன்னை வரவேற்க ஆட்கள் வருவார

ஓர் சுந்தர உரை

சுந்தர காண்டம் குறித்த நண்பர் ஜா ராஜகோபாலன் அவர்களின் உரை இப்போதே நிறைவு பெற்றது. விரிவான தத்துவப்  பின் புலனிலிருந்து சுந்தர காண்டத்தை அணுகிய உரை.  தொடர்ந்து யோசிக்க திறப்புகள் பல உரையில் வந்து கொண்டே இருந்தன.  அனுமனைத்  தடுக்கும், மைநாகம், சுரசை, அங்காரதாரை ஆகியோரை ஆணவம், கன்மம்  மற்றும் மாயையின் இயல்புகளுடன் பொருத்திக் காட்டிய இடம் பிரமாதம்!  ஓர் வில்லியின் தூதன் என்று அனுமன் கூறுவதில் உள்ள நுட்பம் என் வாசிப்பில் அகப்படாத ஒன்று. இன்று திரு. ஜா. ஜா அவர்களால் அகழ்ந்து முன் வைக்கப்பட்டுள்ளது நிகழ்வை சாத்தியமாக்கிய இம்பர்வாரி நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு! .  இதோ புதிய ஆண்டு பிறந்திருக்கிறது, இந்த ஆண்டு சுந்தர காண்டம் குறித்த இனிய நினைவுகளுடன் தொடங்கி இருக்கிறது. இன்னும் இன்னும் நிறைய பரிசுகளை இது கொண்டு வரவிருக்கிறது என்பதற்கு இந்த நிமித்தமே சான்று.  நள்ளிரவு சுமார் 12 மணி 15 நிமிடங்களில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.  இன்னும் பிறவாத தலைமுறை நானும் வாழ்ந்திருந்தேன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக மட்டுமல்ல, ஐயமும் மனச்சோர்வும் என்னை வந்து இடர் செய்யும்போது எண்ணி எண்ணி மீட்டுக

அஞ்சலி- மருத்துவர் மகாதேவன்

புகழ்ப்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் அவர்கள் காலமான செய்தி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. மருத்துவர் மகாதேவன் குறித்த அறிமுகம் எனக்கு பல நிலைகளில் அமைந்தது  . அஜீரணம் சார்ந்த என்னுடைய உடல் உபாதைக்கு பல இடங்களில் சிகிழ்ச்சை பெற்றுக் கொண்டிருந்தேன். மயிலாப்பூரில் உள்ள அவருடைய மருத்துவமனைக்கு ஒரு பிற்பகல் பொழுதில் சென்றிருந்தபோது என்னுடைய நாடியை பரிசோதித்து விட்டு தைராய்டு இருக்கிறதா என்று கேட்டார். ஏதோ ஒரு தொன்மையான மருத்துவ நூலில் இருந்து மேற்கோளை உரைத்து தம்மைச் சூழ்ந்திருந்த மாணவர்களிடம் என் உடல் நிலை குறித்து விளக்கினார். இது முதல் சந்திப்பு.  சில ஆண்டுகள் கழித்து நான் மறுபடியும் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு சில வகை மருந்துப்பொடிகளை‌ வழங்கினார். அவர் கூறிய வண்ணம் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தத் தான் என்னால் இயலவில்லை.  என்னுடைய நண்பர்  முதுகுத்தோலில் ஒரு வகை புற்றுநோய். அவருக்காக மருத்துவரைச் சந்திக்க தரிசனம் கோப்பு சென்றிருந்தோம்.  சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளி சமுதாயத்தினர் அமரும் பெட்டியில் நி

யுகாதிப் பரிசுகள்

இன்று தெலுங்குப் புத்தாண்டு நாள். குப்பம் செல்வதற்கு முன்பும் வீட்டில் இந்த நாள் கொண்டாடப்படுவதுண்டு என்றாலும் ஆந்திராவுக்குச் சென்று குடியேறிய பிறகு இந்த நாளுடன் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டு விட்டது. காரணம் மனதுக்கு நெருக்கமான பல நண்பர்கள் இந்த நாளை மிகவும் உற்சாகமாக எதிர்கொள்வார்கள் என்பதுதான். தெலுங்குப் பண்பாட்டை, இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு இந்த நாள் இன்னும் பிடித்துப் போய்விட்டது. இதோ என் அன்பிற்குரிய கன்னட நண்பர்களுக்கும் தெலுங்கு நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச்  சொல்ல வேண்டும்.   இந்த நாள் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு அல்புனைவு நூல்களுடன் மலர்ந்திருக்கிறது. கதா விலாசம், துணை எழுத்து, எனது இந்தியா, தேசாந்திரி ஆகிய புத்தகங்களுடன் இந்தப்‌புத்தாண்டை  வரவேற்கிறேன். எல்லா மங்களத்துடனும் புத்தாண்டு வருக! ஆம்! அவ்வாறே  நிகழும் என்பதற்கு இந்த நூல் மங்கலமே சான்று!  என் கன்னட நண்பர்களை இப்படி வாழ்த்துகிறேன்  ಹೊಸ ವರ್ಷದ ಶುಭಾಶಯಗಳು

என்னுடைய உரை

சுந்தரகாண்டத்தின் பிணிவீட்டுப் படலம் குறித்த என்னுடைய உரை மார்ச் 22   அன்று  கிளப் ஹவுஸ் செயலி வாயிலாக நடைபெற்றது. பிணிவீட்டுப் படலத்தை தொகுத்துரைக்க அதில் இடம்பெற்றுள்ள பல வகை நாடகியத்  தருணங்களை அறிய முடிந்தது.  பிணிவீட்டுப் படலம் என்பதற்கு அரக்கர்கள் அரக்கத் தன்மை என்ற பிணியிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்குக் காரணமான படலம், அரக்கர்கள் அரக்கத் தன்மையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபடக் காரணமாக அமையும் படலம், இலங்கையின் கட்டுக்கோப்பு என்ற பிணிப்பு அனுமனால் நிரந்தரமாகக் கலைக்கப்படும் படலம் என்ற வெவ்வேறு விளக்கங்களை நண்பர்களுடனான தொடர் கலந்துரையாடலின் வழி அடைய முடிந்தது. அனுமன் இராவணனுக்குக் கூறிய அறிவுரைகளை காப்பியத்தில் இடம் பெற்றுள்ள வெவ்வேறு அறிவுரைப் பகுதிகளுடன் ஒப்பிட்டு விவாதிக்க முடிந்தது. ஒருவருக்கு நாம் அறிவுரை கூறும் போது இருவருக்கும் இடையில் திகழும் உறவு நிலைக்கேற்ப அந்த அறிவுரைகளில் சொற்கள் அமையும். அந்த வகையில் மாறிசன் அறிவுரையில் இரத்த உறவின் விளைவால் தோன்றும் நெருக்கமும்,  அனுமன் அறிவுரையில் சற்று கூடுதல் விலக்கமும், சடாயு உரையில்   இராமன் மற்றும் இராவணன்  இருவருக்கும்

நான் உரையாற்றுகிறேன்

கம்பராமாயணக் கூட்டு வாசிப்பின் பகுதியாக சுந்தரகாண்டம் வாசிப்பு நிறைவடைந்து விட்டது.  காண்டத்தின் சாரத்தைத் தொகுத்துக் கொள்ளும் நோக்கில் இன்றுமுதல் உரைகள் தொடங்குகின்றன. பிணி வீட்டுப் படலம் குறித்து நான்  வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றுகிறேன்   படலத்தை சுருக்கிச் சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அனுமன் இராவணனுக்குச் சொல்லும் அறிவுரைகளை நன்கு விளங்கிக் கொள்ள காப்பியத்தில் இடம் பெற்றுள்ள மற்ற அறிவுரைப் பகுதிகளையும் பார்க்க வேண்டும் என்று நண்பர் ஸ்ரீனிவாஸ் சொல்லிவிட்டார்.  எனவே அவற்றையும் படித்துக்கொண்டு  வருகிறேன்.  இந்த வாத்தியார்  ஸ்ரீநிவாஸ் நிறைய நிறைய வீட்டுப்பாடம்  கொடுக்கிறார்! வாழ்க !  உரை எப்படி அமைகிறது என்று பார்க்க வேண்டும்.  வெள்ளிக்கிழமை சந்திப்போம்! நண்பர்களின் உரைகள் யாவும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!