Posts

நண்பர் அருள்செல்வன் அவர்களுக்கு நன்றி

நேற்று 28 டிசம்பர் 2025 அன்று தினமணி இதழில் ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அப்பா அந்தக் காலத்தில் தினமணி, ஆங்கில இந்து ஆகிய இரு இதழ்களையும் சந்தா கட்டி வீட்டிற்கு வரவழைப்பார். வியாழக்கிழமைகளில் தினமணி இதழில் வெளிவரும் நூலலரங்கம் பகுதியை அந்த காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கச் சொல்லி கேட்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் தினமணிக்கதிர் இணைப்பிதழில் இடம்பெறும் தொடர்களும் 90களில் மிகப் பிரபலம்.  நீரஜா சௌத்ரி என்பவரின் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். இந்திய அரசியலை விமர்சிக்கும் கட்டுரைகள் அவை. மொழிபெயர்ப்பு கட்டுரைகள் பொதுவாக திங்கட்கிழமைகளில் தான் வெளிவரும். சூழலியல் ஆர்வலர் டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் கட்டுரைகளை தினமணி வாயிலாக தான் அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெப்சி குளிப்பான விளம்பரத்தில் இந்த உள்ளம் கேட்குதே மோர் என்று விளம்பர வாசகம் ஒன்று இடம்பெறும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே அந்த விளம்பரத்தை தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவார்கள். டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் இந்த உள்ள...

நான் படித்த கல்லூரியில் பேசுகிறேன்

எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமியும் இணைந்து  ஒரு நாள்  கருத்தரங்கை நடத்துகின்றன.  டிசம்பர் 12 2025 வெள்ளிக்கிழமை அன்று இந்தக் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.         எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசனின் மூன்றாவது நாவல் அனாதை. இந்த நாவலை இருத்தலியல் நோக்கில் அணுகியிருக்கிறேன். தங்கப்பனை  கதிர் நோக்கா கையிருள் என்று வரையறுத்திருக்கிறேன். கை என்ற சொல்லுக்கு சிறுமை என்றும் பொருள் உண்டு. கைக்கிளை என்பதற்கு  சிறிய உறவு என்பதாகத்தான் நம் இலக்கணமரபு விளக்கம் கொடுக்கிறது .         புத்தம் வீடு நாவல் குறித்து நண்பர் சுப்பிரமணி  இரமேஷ் ஒரு கட்டுரையை காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார். புத்தமிடு நாவலை நான் இந்த சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்பது அன்புத் தோழி பேராசிரியர் ஜெ சுடர்விழியின் கட்டளை. ஒரு மிகச் சிறந்த நாவல் ஒன்றை  படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது         புத்தம் வீடு ஒரு கிளாசிக் ...

ஓர் உரை ஒரு கட்டுரை

நம்முடைய துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் புதன் வட்ட நிகழ்வில் இன்று 20 நவம்பர் 2025 அன்று யு. ஆர். அனந்த மூர்த்தியின் 'திவ்யா' நவீனத்துவத்திற்கும் அப்பால் என்னும் பொருளில் இன்று உரையாற்றினேன். பொதுவாக புதன்கிழமை தோறும் நடைபெறுவதால் நிகழ்வின் பெயர் புதன் வட்டம்.  முழு கட்டுரையும் கையில் இருந்தது.‌ தொடர்ந்து மாணவர்கள் சிறப்பான விவாதத்தை முன்னெடுத்தார்கள். அனந்த மூர்த்தி, சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் குறித்தெல்லாம் விவாதம் நிகழ்ந்தது.  மிகவும் நிறைவான இனிமையான நாள் இது! 

ஒரு நாடகம் மறுபடியும் நிகழ்கிறது

2006 அல்லது 2007 ஆக இருக்கலாம்  குப்பத்தில்  ஒரு முடி திருத்தும் கடைக்குச்  சென்றிருந்தேன். குப்பம் போன்ற சிறிய ஊர்களில் ஒருவருக்கு உபயோகித்த பிளேடையே  இன்னொருவருக்கும் உபயோகிப்பதாக ஒரு புகார்  பொதுவாக சொல்லப்படுவதுண்டு.  கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடையில் இருந்தார். அவர்தான் எனக்கு வேண்டியதைச் செய்தார்.   அவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் வந்திருந்த ஞாபகத்தில் விசாரித்தேன். அவரும் எனக்குப் பிடித்த கன்னட பாடலை ஞாபகம் வைத்திருந்து ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தார். நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். 10 நிமிடங்கள் கழிவதற்குள் நான் வாங்கி வந்தும் பிரிக்கப்படாத பிளேடை சுட்டிக்காட்டி நான் பதற்றத்துடன் கேட்டபோது அவர் புதிதாக அடுக்கப்பட்டு இருந்த பிளேடு பொட்டலத்தை எடுத்து என் கைமீது அழுத்தினார். அவர் வேகமாக அழுத்தினார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன! அப்போது பத்மநாபனும் கிருஷ்ணமூர்த்தியும் அங்கில்லை.  2025 நவம்பர்  14.    பார்வையற்ற நிலையில் தன்னந்தனியே சாலையில் நடந்து செல்லும் என்னையும் ஜோதியையும் பார்க்கப் பெருமையாய் இருக்கிறது என்ற...

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதை புகழ்பெற்ற ஒன்று.  ‌ காலச்சுவடு இதழில் எஸ் எல் பைரப்பா அவர்களின் மறைவு சந்தர்ப்பத்தில் தாம் எழுதிய அஞ்சலிக்  கட்டுரையில் இந்த சுயசரிதை குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.   இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் வாழ்வை ஏதோ ஒரு வகையில் பிளேக் நோய் பாதித்திருக்கிறது. யூ ஆர் அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவலில் பிளேக் பற்றிய மனம் நடுக்கும் காட்சிகள் உள்ளன.   ‌ பைரப்பாவின் வாழ்க்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.  மரணங்கள் ,மரணங்கள் , மரணங்கள் ஒரே நாளில் இரண்டு மணி நேரத்திற்குள் அண்ணன் அக்கா ஆகியோரின் மரணங்கள். பிறகு சுசிலா என்னும் ஒன்றரை வயது தங்கையின் மரணம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு நாளில் வந்து சேரும் அம்மாவின் மரணச் செய்தி. அம்மாவின் மரணத்திற்கும் ப்ளேக் தான் காரணம். ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் இடம்பெறும் நஞ்சம்மா யாரும் இல்லை என்னுடைய அம்மா கௌரிதான் என்று பைரப்பா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். அம்மா இறந்து போன தருணத்தில் மனநிலைப் பிற...

அந்தக் கரம் அந்த மனம்

ஓர் ஊனமுற்ற குழந்தை மற்ற ஊனமுற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வளரும்  போது அது தன்னுடைய ஊனத்தைக் குறித்து நன்கு புரிந்து கொள்வது மட்டுமல்ல அதனை சிறப்பாக எதிர்கொள்ளவும் விரைவாகக் கற்றுக் கொள்கிறது. இது ஒரு பொதுவான உண்மை. அப்படி இல்லாமல் அந்தக் குழந்தை பொதுச் சூழலில் தனித்து வளரும் என்றால்  ஊனத்தை அது சரியாக கையாள தெரியாததன் காரணமாக மேலும் மேலும் உடல் சார்ந்த மனம் சார்ந்த வேதனைகளுக்கு உள்ளாகிறது.  பரமக்குடியில் நான் ஊனமுற்ற குழந்தையாக தன்னந்தனியே தான் வளர்ந்தேன்   பார்வையின்மை குறித்த விழிப்புணர்வு அந்த வயதில் எனக்கு போதுமானதாக இல்லாததால் பலவகை துன்பங்களுக்கு உள்ளானேன்.  எவ்வளவு சொன்னாலும் என்னால் மற்ற குழந்தைகளைப் போல தெருவில் விளையாட முடியாது என்பது எனக்குப் புரிந்ததே இல்லை . மற்ற குழந்தைகள் தெருவில் விளையாடும் போது  அம்மாவின் பார்வையிலிருந்து   தப்பித்து தெருவில் இறங்கிச் சென்று சாலையோர மின் கம்பங்களில் மோதிக் கொண்டு நெற்றி புடைக்க வீடு திரும்புவதும், தெரு நாய்களை மிதித்துவிட்டு அலறிக் கொண்டு ஓடி வருவதும் மிகச் சாதாரணமான நிகழ்வுகள்.  பட்டாசு ...

ஒரு யோகியின் பாதத்தில்

யோகம் சார்ந்த அறிமுக கட்டுரைகளை குறிப்புகளை எழுதலாம் என்று வணக்கத்திற்குரிய குருஜி அவர்கள் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இவை விவாதிப்பதற்காக அல்ல. வெறும் அனுபவப் பகிர்தல்கள். இன்னும் சொல்லப்போனால் இவை என்னுடைய அனுபவங்கள். இவை இந்த வினாடியில் உண்மையானவை என்பதன்றி இவற்றிற்கு பெரிய அளவிலான எந்த மதிப்பையும்  நான் வலியுறுத்தவில்லை. என்னை தம் மாணவனாக ஏற்றுக்கொண்டு யோகத்தை அருளிச்செய்த குருஜி சௌந்தர் அவர்களின் திருவடிகளுக்கு என் வணக்கங்கள். யோகம் சார்ந்த என்னுடைய சில புரிதல்களும் அனுபவங்களும் இனி குறுங்கட்டுரைகளாக இந்த வலைப் பக்கத்தில் இடம்பெறும். மற்ற மாணவர்கள் யோகத்தில் நம்பிக்கை கொள்வார்கள் என்றால் இந்த கட்டுரைகள் தம் நோக்கத்தை அடைந்து விட்டன என்றே பொருள்.