அரிமா நோக்கு இதழுக்கு நன்றி

ஹரன் பிரசன்னா ஆக்கங்களில் மாத்வத்துறவியரும் துறவுசார் ஒழுகலாறுகளும் என்ற என் கட்டுரை அரிமா நோக்கு இதழில் வெளி வந்திருக்கிறது. ஹரன் பிரசன்னா எழுதிய மாயப் பெருநதி என்ற நாவலையும் புகைப்படங்களின் நடுவே, சா தேவி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். இவற்றில் உள்ள மாத்வ வாழ்வியலையும் மாத்வ துறவிகள் குறித்த செய்திகளையும் தொகுத்து ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறேன். கல்விப்புல பின்னணியில் எழுதப்பட்ட கட்டுரை. சற்றேறக்குறைய ஆறு மாத்ஙகளுக்கு முன்பு அரிமா நோக்கு இதழுக்கு கட்டுரையை அனுப்பி வைத்தேன். ஜனவரி 2025 இதழில் வெளிவந்திருக்கிறது. என் கட்டுரையை பரிசீலித்து வெளியிட்ட பேராசிரியர் ஜெயதேவன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.‌

Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்