Posts

Showing posts from December, 2024

இங்கிருந்து அங்கு பார்க்க இரண்டு சாளரங்கள்

தாம் வீட்டிலிருந்து வெளியேறி ஒரு நாடோடி போல் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்த அனுபவங்களை எழுத்தாளர் ஜெயமோகன் புறப்பாடு என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.  வீட்டில் கோபித்துக் கொண்டு நாகர்கோயிலில் இருந்த மாணவர் விடுதியில் தங்கியிருக்கிறார். கட்டடத் தொழிலாளியாக வேலை செய்கிறார். தாம் ஓர் அருட்தந்தையாக வேண்டும் என்று நினைக்கும் அருள், எளிய சுமை தூக்கும் பணிகளை மேற்கொள்ளும் நாகமணி போன்ற பல்வேறு நண்பர்கள் வேறுபட்ட குண இயல்புகளுடன் அந்த விடுதியில் இருக்கிறார்கள்.  ஜான் எப்போதும் ஜெபித்துக் கொண்டே இருக்கிறான். ஆங்கிலம் பேசத் தெரியாமல் கல்லூரியில் மாரிமுத்து தவிக்கிறான்.  ஒரு அடிதடித் தகராறில் நாகமணிக்காக உதவச் செல்லும் ஜெயமோகனையும்  ஆபத்து சூழ்ந்துகொள்கிறது. கடைசியாக அவருடைய அண்ணன் வந்து ஜெயமோகனை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.  இவ்வாறு முதல் பகுதி நிறைவடைகிறது  உயிர் நண்பன் ராதாகிருஷ்ணன் பற்றிய விவரிப்புகள் புறப்பாடு நூலில் மிக விரிவாக இடம் பெற்றுள்ளன. ராணுவத்தில் சேர முடியவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் ராதாகிருஷ்ணனின் இறப்பு ஜெயமோகனை அதிகம் பாதித்து வ...

ஒரு பேரலை

2024 விஷ்ணுபுரம் விழாவிற்காக சில மாதங்களாகவே தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் பல நூல்கள்  விழா தொடங்க ஒரு வாரம் இருக்கும் முன்பு தான் கிடைத்தன.   எப்படியோ கையில் இருந்த நூல்களை எல்லாம் படித்து விட்டேன் ‌ அவ்வாறு படித்துவிட்டு விழாவிற்கு சென்றது நிறைவாக இருந்தது.  டிசம்பர் 16 முதல் 20 வரை படித்த நூல்கள்  துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிராஜா  100 ரூபில்கள் மயிலன் ஜி சின்னப்பன்  பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் மயிலன் ஜி சின்னப்பன்  மண்டோவின் காதலிகள் லாவண்யா சுந்தர்ராஜன் ஆரண்யம்  கயல்  ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கயல்  பொற்பனையான் சித்திரன்  ஒரு பேரலையில் சறுக்கி விளையாடக் கிடைத்த ஒரு வாரம். 

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மோகன் கூப்பிட்டு அதைக் கூறியபோது அதிர்ச்சி, எரிச்சல், துக்கம் ,ஏமாற்றம் எல்லாமும் ஆக இருந்தது.  திங்கட்கிழமை காலை அவர் விளையாட்டாக என்னுடன்  தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தார். இது உண்மை என்றால் வியாழக்கிழமை அவர் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளத்தான் விருப்பமில்லை. நம் விருப்பமெல்லாம் அதற்கு ஒரு பொருட்டே இல்லை என்பது வேறு கதை.  செய்யாறு கல்லூரியில் அவர் வரலாற்றுத் துறையில் பணியாற்றும் காலத்திலிருந்தேஅறிமுகம் உண்டு என்றாலும், அப்பா இல்லாமல் அழுத என் அன்புத் தங்கை உமாவுக்கு (பேராசிரர் அ மோகன் அவர்களின் மனைவி)  அவர் பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுத்ததை அறிந்த போது தான் அவர் மீது எனக்கு இன்னும் அன்பும் மதிப்பும் அதிகரித்தது. சம்பிரதாயத்துக்காக ஒரு முறை மட்டும் அது கொடுக்கப்படவில்லை. அண்ணனுடைய சீர் உமாவை வந்து சேர்வது வருடம் தோறும் நிகழும் ஒரு வழக்கமாக இருந்தது.  .  நண்பர் ஒருவரின் முனைவர்ப் பட்டம் தொடர்பாக அடிக்கடி பேசிக்கொள்ள அமைந்தது. இயல்பாகவே சிலருடன் மனம் ஒட்டிக்கொண்டு விடுகிறது. எனக்கு அப்படி ஒரு அந்தரங்கமான நெ...

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

இது ஒரு பழைய செய்தி. மிகப் பழைய செய்தி. அப்போதே நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் எழுத முடிந்தது. இப்போதாவது எழுத முடிந்ததே என்று நிறைவடைய வேண்டியதுதான்!  விரல் மொழியர் என்னும் பெயரில் பார்வையற்றவர்களின்  வாசிப்புக் குழு ஒன்று புலனத்தில் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள் பொன் சக்திவேல், மனோகரன், பாலகணேசன் போன்ற பார்வையற்ற நண்பர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு பார்வையற்றவர்களிடம் வாசிப்புப் பழக்கம் மேம்பட பணியாற்றி வருகிறார்கள்.  . அச்சு நூல்களைப் பார்வையற்றவர்கள் வாசிக்கும் வண்ணம் மின் நூல்களாக மாற்றும் ஒரு பெரிய பணியை நண்பர் சக்திவேல் முன்னெடுக்கிறார்..  நூல்களின் அட்டைகளை கழற்றி விட்டு அவற்றை ஸ்கேன் செய்யும் பணியை அவர் சளைக்காமல் முன்னெடுக்கிறார். ஒரு நூலை இவ்வாறு செய்யலாம். சில நூல்களையும் செய்து விடலாம். நூற்றுக்கணக்கான நூல்களை பொறுமையாக ஸ்கேன் செய்ய குறையாத ஈடுபாடு வேண்டும். நண்பர் சக்திவேலுக்கு அது நிறைய நிறைய இருக்கிறது.  இதற்காக அவர் செலவிடும்  நேரமும் உழைப்பும் மகத்தானவை. நானும் விரல் மொழியர் வாசிப்புக் குழுவில் இருக்கிறேன்....