சொல்வனம் இதழுக்கு நன்றி

எஸ் திவாகர் கன்னடத்தில் எழுதிய சலா என்று சிறுகதை உறுதி என்ற பெயரில் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. , சிறுகதை ஜூன் 25 சொல்வனம் இதழில் வெளிவந்துள்ளது. ஜூன் 25 எனக்கு ஒரு முக்கியமான நாள். இரண்டாவது மகன் அபிநவ பாரதியின் பிறந்தநாள். எனவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மேலும் ஒரு கூடுதல் செய்தி. சரஸ்வதி என்ற அம்மையார் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தார். அவர் சிறுகதையை ஒலிப்பதிவு செய்து வலையேற்றியிருந்தார். 
அமெரிக்காவில் தமிழ் பேசத் தெரிந்து வாசிக்கப் பொழுது கிடைக்காத நண்பர்களுக்காக இந்த பணியை முதுமையிலும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான் எத்தனை வழிகள். சரஸ்வதி அம்மையாருக்கு  வணக்கங்கள். 
நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்தப் பணியில் எனக்கு உதவினார். பேராசிரியர் சிவக்குமார் திராவிடப்  பல்கலைக்கழக துளுவியல் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். அவரும் இந்தப் பணியில் என்றுடன் நின்றார் இருவருக்கும் என் நன்றியும்,அன்பும்.  சொல்வனம் ஆசிரியக்குழுவுக்கு என் நன்றி. இணைய வாசிப்பு எனக்கு சாத்தியமான காலத்தில் அறிமுகமான இதழ் சொல்வனம்.  நான் நெடுநாள் வாசகனாகயிருக்கும் இதழில்   மொழிபெயர்ப்பு வெளிவந்தது எனக்கு நிறைவைத்  தருகிறது. முன்பே சொல்லியிருக்கலாம், தவறிவிட்டது. நேரம் இருக்கும்போது வாசித்துப் பாருங்களேன். 

இணைப்பு:



Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்