Posts

Showing posts from October, 2025

அந்தக் கரம் அந்த மனம்

ஓர் ஊனமுற்ற குழந்தை மற்ற ஊனமுற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வளரும்  போது அது தன்னுடைய ஊனத்தைக் குறித்து நன்கு புரிந்து கொள்வது மட்டுமல்ல அதனை சிறப்பாக எதிர்கொள்ளவும் விரைவாகக் கற்றுக் கொள்கிறது. இது ஒரு பொதுவான உண்மை. அப்படி இல்லாமல் அந்தக் குழந்தை பொதுச் சூழலில் தனித்து வளரும் என்றால்  ஊனத்தை அது சரியாக கையாள தெரியாததன் காரணமாக மேலும் மேலும் உடல் சார்ந்த மனம் சார்ந்த வேதனைகளுக்கு உள்ளாகிறது.  பரமக்குடியில் நான் ஊனமுற்ற குழந்தையாக தன்னந்தனியே தான் வளர்ந்தேன்   பார்வையின்மை குறித்த விழிப்புணர்வு அந்த வயதில் எனக்கு போதுமானதாக இல்லாததால் பலவகை துன்பங்களுக்கு உள்ளானேன்.  எவ்வளவு சொன்னாலும் என்னால் மற்ற குழந்தைகளைப் போல தெருவில் விளையாட முடியாது என்பது எனக்குப் புரிந்ததே இல்லை . மற்ற குழந்தைகள் தெருவில் விளையாடும் போது  அம்மாவின் பார்வையிலிருந்து   தப்பித்து தெருவில் இறங்கிச் சென்று சாலையோர மின் கம்பங்களில் மோதிக் கொண்டு நெற்றி புடைக்க வீடு திரும்புவதும், தெரு நாய்களை மிதித்துவிட்டு அலறிக் கொண்டு ஓடி வருவதும் மிகச் சாதாரணமான நிகழ்வுகள்.  பட்டாசு ...

ஒரு யோகியின் பாதத்தில்

யோகம் சார்ந்த அறிமுக கட்டுரைகளை குறிப்புகளை எழுதலாம் என்று வணக்கத்திற்குரிய குருஜி அவர்கள் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இவை விவாதிப்பதற்காக அல்ல. வெறும் அனுபவப் பகிர்தல்கள். இன்னும் சொல்லப்போனால் இவை என்னுடைய அனுபவங்கள். இவை இந்த வினாடியில் உண்மையானவை என்பதன்றி இவற்றிற்கு பெரிய அளவிலான எந்த மதிப்பையும்  நான் வலியுறுத்தவில்லை. என்னை தம் மாணவனாக ஏற்றுக்கொண்டு யோகத்தை அருளிச்செய்த குருஜி சௌந்தர் அவர்களின் திருவடிகளுக்கு என் வணக்கங்கள். யோகம் சார்ந்த என்னுடைய சில புரிதல்களும் அனுபவங்களும் இனி குறுங்கட்டுரைகளாக இந்த வலைப் பக்கத்தில் இடம்பெறும். மற்ற மாணவர்கள் யோகத்தில் நம்பிக்கை கொள்வார்கள் என்றால் இந்த கட்டுரைகள் தம் நோக்கத்தை அடைந்து விட்டன என்றே பொருள். 

தித்திக்கும் தருணங்கள்

ஆசிரியர் தீ . ந.  ஸ்ரீ கண்டய்யா அவர்களின் "பாரதிய காவ்ய மீமாம்சே"   நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு குருகு இதழில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதி ஏழாவது அத்தியாயம் வெளி வந்திருக்கிறது. இந்த அத்தியாயத்துடன் மூன்று பகுதிகள் கொண்ட நூலில் முதற் பகுதி நிறைவடைகிறது. அவையடக்கமெல்லாம் கிடையாது, உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த நூலை நான் மொழிபெயர்க்கவில்லை, இந்த நூல் என் மூலமாக தன்னை தமிழில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதுதான் பொருத்தமானது.  உண்மையிலேயே இது ஒரு முக்கியமான பங்களிப்புதான். இதுவரை வெளிவந்துள்ள ஏழு அத்தியாயங்களை மட்டுமே கூட தொகுத்து, விரும்பினால் சிறிது "எடிட்"  செய்து நூலாக வெளியிடலாம்.  என் ஆசிரியர்களின் அருளால் இந்தப் பணி நடைபெறுகிறது. என் மாணவர்களின் அன்பால் நண்பர்களின் உடனிருப்பால் ஒரு கனவு நனவாகிறது.  குருகு நண்பர்கள் அபினாசி தாமரைக்கண்ணன், புதுவை தாமரைக்கண்ணன், அனங்கன் ஆகியோருடன் இந்தப் பணி தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடியிருக்கிறேன். எனக்கு இருந்த அகத்தடைகளை நான் கடப்பதற்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். நெருக்கட...