Posts

Showing posts from December, 2025

நண்பர் அருள்செல்வன் அவர்களுக்கு நன்றி

நேற்று 28 டிசம்பர் 2025 அன்று தினமணி இதழில் ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அப்பா அந்தக் காலத்தில் தினமணி, ஆங்கில இந்து ஆகிய இரு இதழ்களையும் சந்தா கட்டி வீட்டிற்கு வரவழைப்பார். வியாழக்கிழமைகளில் தினமணி இதழில் வெளிவரும் நூலலரங்கம் பகுதியை அந்த காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கச் சொல்லி கேட்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் தினமணிக்கதிர் இணைப்பிதழில் இடம்பெறும் தொடர்களும் 90களில் மிகப் பிரபலம்.  நீரஜா சௌத்ரி என்பவரின் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். இந்திய அரசியலை விமர்சிக்கும் கட்டுரைகள் அவை. மொழிபெயர்ப்பு கட்டுரைகள் பொதுவாக திங்கட்கிழமைகளில் தான் வெளிவரும். சூழலியல் ஆர்வலர் டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் கட்டுரைகளை தினமணி வாயிலாக தான் அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெப்சி குளிப்பான விளம்பரத்தில் இந்த உள்ளம் கேட்குதே மோர் என்று விளம்பர வாசகம் ஒன்று இடம்பெறும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே அந்த விளம்பரத்தை தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவார்கள். டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் இந்த உள்ள...

நான் படித்த கல்லூரியில் பேசுகிறேன்

எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமியும் இணைந்து  ஒரு நாள்  கருத்தரங்கை நடத்துகின்றன.  டிசம்பர் 12 2025 வெள்ளிக்கிழமை அன்று இந்தக் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.         எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசனின் மூன்றாவது நாவல் அனாதை. இந்த நாவலை இருத்தலியல் நோக்கில் அணுகியிருக்கிறேன். தங்கப்பனை  கதிர் நோக்கா கையிருள் என்று வரையறுத்திருக்கிறேன். கை என்ற சொல்லுக்கு சிறுமை என்றும் பொருள் உண்டு. கைக்கிளை என்பதற்கு  சிறிய உறவு என்பதாகத்தான் நம் இலக்கணமரபு விளக்கம் கொடுக்கிறது .         புத்தம் வீடு நாவல் குறித்து நண்பர் சுப்பிரமணி  இரமேஷ் ஒரு கட்டுரையை காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார். புத்தமிடு நாவலை நான் இந்த சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்பது அன்புத் தோழி பேராசிரியர் ஜெ சுடர்விழியின் கட்டளை. ஒரு மிகச் சிறந்த நாவல் ஒன்றை  படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது         புத்தம் வீடு ஒரு கிளாசிக் ...