Posts

Showing posts from September, 2025

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

இலக்கியம் என்னவெல்லாம் கொடுக்கும், ஓர் உடம்பில் இருந்து கொண்டு ஓர் ஆயிரம்  வாழ்க்கையை வாழும் வாய்ப்பை!  அப்புறம் சில இனிய நினைவுகளை எப்போதும் நிறைவளிக்கும் உறவுகளை இவ்வாறு இலக்கியம் கொடுப்பவை அநேகம். .  நண்பர் சாகுல் ஹமீதிடம் அப்துல் வகாப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். பரமக்குடியில் மேலை முஸ்லிம் ஹைராப்த்துல் அலியா நடுநிலைப் பள்ளியில் 1988 89 ஆம் கல்வியாண்டில்  வகாபும் நானும்  ஆறாம் வகுப்பு படித்தோம். பார்வையற்ற மாணவன் என்பதால் என்னை வகுப்பில் முதல் வரிசையில் முதலில் உட்கார வைத்திருப்பார்கள். என்னுடன் வகாப் உட்கார்ந்திருப்பான். தாமஸ் யூரிக் காதரின் என்னும் மற்றொரு பையன் எங்களுடன் இருப்பான். முகமது அபுபக்கர், காத்தய்யா. மும்தாஜ் டீச்சர் வீட்டிற்கு எங்கள் அட்டையில் ரேஷன் வாங்கிக் கொண்டு போவேன். பணத்தை எண்ணி எண்ணி என் சட்டையில் வைத்துவிட்டு   அது எங்கும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குண்டூசியையும் டீச்சர் குத்தி விடுவார்.   ரிக்க்ஷாகாரர் வராத நாட்களில் என்னை வீட்டிற்கு கொண்டு வந்து விடும் பொறுப்பை வகாப் ஏற்றுக் கொள்வான்‌  இஸ்லாமியப் ப...

எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது

2025 ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட இருக்கிறது. ரமேஷ் பிரேதன் எழுதிய ஐந்தவித்தான் என்ற ஒரே ஒரு நாவலை மட்டும் படித்திருக்கிறேன். இரு பகுதிகளாக அமைந்த அந்த நாவல் முதல் பகுதி நேர்கோட்டு நிலையிலும் இரண்டாம் பகுதி அல் நேர்கோட்டு நிலையிலும் அமைந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய மற்ற படைப்புகளை முடிந்தவரை படிக்க வேண்டும்.   டிசம்பருக்குக் காத்திருக்கிறேன்!