Posts

Showing posts from July, 2025

பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்களுக்கு அஞ்சலி

திராவிடப் பல்கலைக்கழக மேல் நாள் துணை வேந்தர் பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்கள்  அமெரிக்காவில் மறைந்தார் என்னும் செய்தி கிடைத்தது. 2005 முதல் 2008 வரை திராவிட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்கள் பொறுப்பேற்று வழி நடத்தினார்கள். அவருடைய காலகட்டத்தில் தான் எனக்கு பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. நான் கன்னடத்தில் இருந்து மொழிபெயர்ப்புகள் செய்ய வேண்டும் என்று என்னை அவர் அதிகம் ஊக்கப்படுத்தினார். அம்மாவிற்கு சிறந்த பெண்மணி என்று நம் பல்கலைக்கழகத்தின் சார்பில் விருது வழங்கி சிறப்பித்தார்கள். பல்கலைக்கழகம் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த விழா மலரில் அம்மாவின் பெயர் புகைப்படத்துடன் நிரந்தரமாக இடம்பெறும் படி செய்தார்கள். என் தனி வாழ்வில் நான் சந்தித்த நெருக்கடிகளின் போது குடும்பப் பெரியவர் போல ஆலோசனைகள் வழங்கியதுண்டு.  இவையெல்லாம் அவர் பற்றிய இனிய நினைவுகள். துறை தொடர்பான கலந்தாய்வு கூட்டங்களில் அவருடைய இன்னொரு முகம் வெளிப்படுவதைக் கண்டு வியந்ததுண்டு.  எஸ் எல் பைரப்பாவின் பர்வா‌ நாவலை கன்னட மொழியிலிருந்து தெலுங்கு மொழியில் ம...

நேற்று கிடைத்த அரு மணி

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி கதைகள் என்ற ஒரு சிறுகதை தொகுப்பைப் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். வாங்கியதாகவும் நினைவு. ஆனால் இப்போது நூல் கையில் இல்லை. குற்றமும் தண்டனையும் நாவலை படித்து கண்ணீர் விட்ட ஓர் இளம்  வாசகி பற்றி  ஆசிரியர் ஜெயமோகன் தம் இணையதளத்தில் எழுதி இருந்தார். அந்த இளம் வாசகி தற்போது எழுத்தாளர் அருண்மொழி நங்கை என்று அறியப்படுகிறார். ஓர் ரஷ்ய இலக்கிய மேதையின் படைப்பை வாசித்து தமிழ் மனம் கண்ணீர் விடுவது என்றால் அது எப்படிப்பட்டது?  அந்த அனுபவத்தைப் பெறாமல் நான் என்ன தமிழ் மாணவன்? உலகெங்கிலும் உள்ள இலக்கிய வாசகர்களிடம் டால்ஸ்டாய் கட்சி தஸ்தயெவ்ஸ்கி  கட்சி என்று இரு பிரிவுகள். அவருடைய மூன்று நாவல்களிலும் இவருடைய மூன்று நாவல்களிலும் ஆகச் சிறந்தவை எவை என்று ஓயாத விவாதங்கள். நீ எந்த தரப்பு. உன் நிலைப்பாடு என்ன? எல்லாவற்றையும் படித்துவிட்டு வா அப்புறம் பேசலாம் என்று எழுத்தாளர் இரா‌. இராமன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது அப்படியே எஞ்சி இருக்கிறது.  காவியம்  நாவல் முடிவடைந்ததும் மனம் ஒரு பெரும் படைப்பையே எதிர்ப...