Posts

Showing posts from April, 2024

ஓர் சுந்தர உரை

சுந்தர காண்டம் குறித்த நண்பர் ஜா ராஜகோபாலன் அவர்களின் உரை இப்போதே நிறைவு பெற்றது. விரிவான தத்துவப்  பின் புலனிலிருந்து சுந்தர காண்டத்தை அணுகிய உரை.  தொடர்ந்து யோசிக்க திறப்புகள் பல உரையில் வந்து கொண்டே இருந்தன.  அனுமனைத்  தடுக்கும், மைநாகம், சுரசை, அங்காரதாரை ஆகியோரை ஆணவம், கன்மம்  மற்றும் மாயையின் இயல்புகளுடன் பொருத்திக் காட்டிய இடம் பிரமாதம்!  ஓர் வில்லியின் தூதன் என்று அனுமன் கூறுவதில் உள்ள நுட்பம் என் வாசிப்பில் அகப்படாத ஒன்று. இன்று திரு. ஜா. ஜா அவர்களால் அகழ்ந்து முன் வைக்கப்பட்டுள்ளது நிகழ்வை சாத்தியமாக்கிய இம்பர்வாரி நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு! .  இதோ புதிய ஆண்டு பிறந்திருக்கிறது, இந்த ஆண்டு சுந்தர காண்டம் குறித்த இனிய நினைவுகளுடன் தொடங்கி இருக்கிறது. இன்னும் இன்னும் நிறைய பரிசுகளை இது கொண்டு வரவிருக்கிறது என்பதற்கு இந்த நிமித்தமே சான்று.  நள்ளிரவு சுமார் 12 மணி 15 நிமிடங்களில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.  இன்னும் பிறவாத தலைமுறை நானும் வாழ்ந்திருந்தேன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக மட்டுமல்ல, ஐயமும் மனச்சோர்வும் என்னை வந்து இடர் செய்யும்போது எண்ணி எண்ணி மீட்டுக

அஞ்சலி- மருத்துவர் மகாதேவன்

புகழ்ப்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் அவர்கள் காலமான செய்தி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. மருத்துவர் மகாதேவன் குறித்த அறிமுகம் எனக்கு பல நிலைகளில் அமைந்தது  . அஜீரணம் சார்ந்த என்னுடைய உடல் உபாதைக்கு பல இடங்களில் சிகிழ்ச்சை பெற்றுக் கொண்டிருந்தேன். மயிலாப்பூரில் உள்ள அவருடைய மருத்துவமனைக்கு ஒரு பிற்பகல் பொழுதில் சென்றிருந்தபோது என்னுடைய நாடியை பரிசோதித்து விட்டு தைராய்டு இருக்கிறதா என்று கேட்டார். ஏதோ ஒரு தொன்மையான மருத்துவ நூலில் இருந்து மேற்கோளை உரைத்து தம்மைச் சூழ்ந்திருந்த மாணவர்களிடம் என் உடல் நிலை குறித்து விளக்கினார். இது முதல் சந்திப்பு.  சில ஆண்டுகள் கழித்து நான் மறுபடியும் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு சில வகை மருந்துப்பொடிகளை‌ வழங்கினார். அவர் கூறிய வண்ணம் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தத் தான் என்னால் இயலவில்லை.  என்னுடைய நண்பர்  முதுகுத்தோலில் ஒரு வகை புற்றுநோய். அவருக்காக மருத்துவரைச் சந்திக்க தரிசனம் கோப்பு சென்றிருந்தோம்.  சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளி சமுதாயத்தினர் அமரும் பெட்டியில் நி

யுகாதிப் பரிசுகள்

இன்று தெலுங்குப் புத்தாண்டு நாள். குப்பம் செல்வதற்கு முன்பும் வீட்டில் இந்த நாள் கொண்டாடப்படுவதுண்டு என்றாலும் ஆந்திராவுக்குச் சென்று குடியேறிய பிறகு இந்த நாளுடன் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டு விட்டது. காரணம் மனதுக்கு நெருக்கமான பல நண்பர்கள் இந்த நாளை மிகவும் உற்சாகமாக எதிர்கொள்வார்கள் என்பதுதான். தெலுங்குப் பண்பாட்டை, இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு இந்த நாள் இன்னும் பிடித்துப் போய்விட்டது. இதோ என் அன்பிற்குரிய கன்னட நண்பர்களுக்கும் தெலுங்கு நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச்  சொல்ல வேண்டும்.   இந்த நாள் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு அல்புனைவு நூல்களுடன் மலர்ந்திருக்கிறது. கதா விலாசம், துணை எழுத்து, எனது இந்தியா, தேசாந்திரி ஆகிய புத்தகங்களுடன் இந்தப்‌புத்தாண்டை  வரவேற்கிறேன். எல்லா மங்களத்துடனும் புத்தாண்டு வருக! ஆம்! அவ்வாறே  நிகழும் என்பதற்கு இந்த நூல் மங்கலமே சான்று!  என் கன்னட நண்பர்களை இப்படி வாழ்த்துகிறேன்  ಹೊಸ ವರ್ಷದ ಶುಭಾಶಯಗಳು